இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பரவல் – ஒரே நாளில் 17,092 பேருக்கு பாதிப்பு!
இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிப்புக்குள்ளானோர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு நிலவரத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.
கொரோனா பரவல்
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதையடுத்து தற்போது நாட்டில் ஒரு நாள் பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்க உள்ளது. அத்துடன் இதில் தமிழகத்தில் ஒரு நாள் பாதிப்பு 2 ஆயிரத்தை தாண்டி பதிவாகிறது. நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 18 ஆயிரத்து 819 ஆக பதிவாகியுள்ளது. இதையடுத்து நேற்று தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 17 ஆயிரத்து 70 பேர் என சற்றே குறைந்த நிலையில் இன்று கொரோனா பாதிப்பு அதிரடியாக உயர்ந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,86,326 ஆக உயர்ந்துள்ளது. மேலும் தொற்றால் ஒரே நாளில் 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் கொரோனாவால் நாட்டில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 5,25,168 ஆக அதிகரித்துள்ளது.
8ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – முழு விவரங்களுடன்…!
இதே போல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 14,684 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,28,51,590 ஆக உள்ளது. அதன்படி மருவத்துவமனைகளில் 1,09,568 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்தியா முழுவதும் 1,97,84,80,015 பேருக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,09,776 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.