தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை விளக்கம்!

0
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு - கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு - கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை விளக்கம்!

தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நடப்பு கல்வியாண்டில், ஆண்டு இறுதித்தேர்வு கட்டாயமாக நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஆண்டு இறுதித்தேர்வு

கடந்த சில நாட்களாக நாடு முழுவதும் கொரோனா பேரலைத்தொற்று மீண்டுமாக அதிகரித்து வரும் இந்த சூழலில் முழு ஊரடங்கு குறித்த அச்சம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பேரலைத்தொற்று மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வந்ததால் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு, பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டது. இருப்பினும் நோய்த்தொற்று குறைந்த ஒரு சில வாரங்களுக்கு மட்டும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டன.

தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 30) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

ஆனால் கடந்த ஜனவரி மாதம் உருவான கொரோனா 3ம் அலைக்கு பிற்பாடு 1 முதல் 12ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் முழுமையாக திறக்கப்பட்டது. அந்த வகையில் தமிழகத்திலும் பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்படி இருக்க, தமிழகத்தில் இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகளை ஆப்லைன் முறையில் நடத்த முடிவு செய்த பள்ளிக்கல்வித்துறை அதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் தற்போது கொரோனா புதிய பாதிப்புகள் பதிவாகி வருவதால் பள்ளிகள் மீண்டும் மூடப்படக்கூடும் என சில வதந்திகள் எழுந்து வருகிறது.

Exams Daily Mobile App Download

ஆனால், இந்த ஆண்டு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த வகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயம் ஆண்டு இறுதித்தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை விளக்கம் கொடுத்துள்ளது. இதற்கிடையில் தமிழகத்தின் அண்டை யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் 1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!