தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 30) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
பரமக்குடி மின் நிலையத்தில் நாளை ஏப்ரல் 30ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளை விரிவாக பார்ப்போம்.
மின்தடை
தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் தவறாமல் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மின் பயனர்களுக்கு பாதுகாப்பான முறையில் தடையில்லா மின்சாரம் தொடர்ந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சம்பந்தப்பட்ட மின் நிலையத்தில் மின் வயர்கள் மாற்றுதல், இணைப்புகளை சரி செய்தல், பழுதடைந்த மின் கருவிகள் மாற்றுதல், மின் கம்பங்கள் அருகே மின் விநியோகத்திற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றப்படுவது போன்ற பணிகளை மின் ஊழியர்கள் மேற்கொள்கின்றனர்.
1 முதல் 9ம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – நாளை முதல் கோடை விடுமுறை துவக்கம்!
அதன்படி, மின் பராமரிப்பு பணிகள் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பை வெளியிடுகிறார். மேலும் மின் பயனாளர்கள் முன்கூட்டியே மின் சார்ந்த பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஏப்ரல் 30ம் தேதி பரமக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பரமக்குடி நகர் மற்றும் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் சனிக்கிழமை காலை 6 மணி முதல் 10 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிட்டுள்ளது.