NEET மதிப்பெண் இல்லாமல் காலிப்பணியிடங்கள் நிரப்பல் – முக்கிய தகவல்!
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான நீட் தேர்வு மூலமாக தான் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்நிலையில் நீட் நுழைவுத் தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் இல்லாமல் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
நீட் தேர்வு
நாடு முழுவதும் 2021 கல்வியாண்டுக்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான (DM/M.Ch/DNB (Super Speciality)) ஆகியவற்றிற்கு நீட் நுழைவு தேர்வு கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி மத்திய அரசின் தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்பட்டது. அதன் பின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ கலந்தாய்வு குழு அகில இந்திய மற்றும் மாநில அளவில் உள்ள இடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது.
Exams Daily Mobile App Download
ஆனால் அதில் பெரும்பான்மையான இடங்கள் நிரப்பப்படாமல் இருந்தது. அதனால் அந்த இடங்களை நிரப்ப மத்திய சுகாதார அமைச்சகம் நீட் தேர்வு மதிப்பெண்ணில் 15 சதவீதம் குறைப்பது என முடிவு செய்தது. அதன் பின் இரண்டு கூடுதல் கலந்தாய்வுகளும், சிறப்பு கலந்தாய்வும் நடைபெற்றது. ஆனால் அதன் பின்னரும் கூட 747 இடங்கள் காலியாக இருந்தன. அதனால் இந்த இடங்களை நிரப்புவது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ஆலோசனை நடத்தியது. அதில் கட் ஆஃப் மதிப்பெண் கணக்கில் கொள்ளாமல் இரண்டாவது சிறப்பு கலந்தாய்வு நடத்த கலந்தாய்வு குழு முடிவெடுத்துள்ளது.
சமூக பாதுகாப்பு நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது
இதன் மூலமாக நீட் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றவர்கள் கூட இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என குழு தெரிவித்துள்ளது. இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி கூறுகையில், சூப்பர் ஸ்பெஷலிட்டி மருத்துவ சீட் பூஜ்ஜிய மதிப்பெண் பெற்றவர்களுக்கு கூட கிடைக்கும். இப்படியான நிலையில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி நீட் தேர்வுக்கு நடக்கும் போது, ஏன் எதிர்காலத்தில் மற்ற நுழைவுத் தேர்வுகளிலும் நடக்கக் கூடாது என தெரிவித்துள்ளார். இது நுழைவுத் தேர்வுகள் தோல்வியடைந்ததை நிரூபிக்கிறது. பள்ளி பொதுத் தேர்வு மற்றும் கல்லூரி செமஸ்டர் தேர்வுகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வாருங்கள். அவற்றின் இறுதித் தேர்வுகளின் அடிப்படையில் சேர்க்கை இருக்க வேண்டும், என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது.