அரசுப் பணிகளில் 50,000 காலியிடங்கள் நிரப்புதல் – தெலுங்கானா அரசு துவக்கம்!
தெலுங்கானா மாநில அரசுத்துறை நிர்வாகத்தில் காலியாக உள்ள 50,000 பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்துள்ளதாக முதல்வர் சந்திரசேகர் ராவ் தகவல் அளித்துள்ளார்.
பணியிடங்கள் நிரப்பல்
அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பணிகளில் தெலுங்கானா மாநில அரசு ஈடுபட்டுள்ளது. இது குறித்த தகவலை தெலுங்கானா முதல்வர் முதல்வர் சந்திரசேகர் ராவ் ஒரு செய்தியாளர்களின் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதற்கு முன்னதாக உலக இளைஞர் திறன் தினத்தை முன்னிட்டு இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ‘தெலுங்கானா அரசு, தொழில்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையில் இளைஞர்களுக்கான லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – உணவு வழங்கல் துறை செயலாளர் உத்தரவு!
இது தவிர அரசுத் துறையில் இளைஞர்களுக்கென இதுவரை 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட பணிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தெலுங்கானாவில் புதிய மண்டல அமைப்பதற்கான அனுமதி கிடைத்துள்ள நிலையில், எதிர் காலங்களில் அரசுத்துறைகளில் கூடுதலாக 50,000 பேரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன’ என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தெலுங்கானா முதல்வர் குறிப்பிட்ட படி வரும் காலங்களில் வேலை நாட்காட்டியின் படி இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்தி குறிப்பு கூறுகிறது. இது தவிர அம்மாநிலத்தில் தொழில், தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம், விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. வரும் நாட்களில் இளைஞர்களின் திறமைகளுக்கு ஏற்றவாறு இவை புதுப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.