தமிழகத்தில் கால்நடைத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
காலி பணியிடம்:
தமிழகத்தில் செயல்படும் கால்நடை மருத்துவ கல்லூரிகளுக்கு தேவையான வசதிகளை அரசு செய்து கொடுத்து வருகிறது. சமீபத்தில் ஒரே நேரத்தில் 1,400 பணியிடங்களையும் அரசு நிரப்பியது. இதனிடையே, ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் ரூ. 13 கோடி செலவில் மரபுவழி கால்நடை மூலிகைப் பொருள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கருவிகளை அரசு அமைத்து கொடுத்துள்ளது.
இதன் மூலமாக கால்நடைகளுக்கு மருத்துவம் பார்க்கப்பட்டு வருகிறது. இது போன்ற ஏகப்பட்ட நடவடிக்கையினை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கால்நடை மருத்துவமனைகளில் காலியாகவுள்ள பணியிடங்கள் தொடா்பாக நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கு விசாரணை முடிவுக்கு வர இருக்கிறது. இதனால், காலியாகவுள்ள பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என மீன் வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.