தமிழகத்தில் நாளை (பிப்.22) மின்தடை – அலர்டா இருங்க மக்களே! ஏரியா லிஸ்ட் இதோ!
பிப்ரவரி 22ம் தேதியான நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியல் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தின் அனைத்து துணை மின் நிலையங்களிலும் முறையாக மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு, தேவையற்ற மின்தடைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, பகுதிவாரியாக தகுந்த முன்னறிவிப்புகளோடு மின்தடைக்கான அறிவிப்பு சம்பந்தப்பட்ட துணை மின் நிலைய பகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டு, மின்தடை செய்யப்படுகிறது.
கிடுகிடுவென உயர்ந்த தங்கத்தின் விலை – ஒரே நாளில் ரூ.200 அதிகரிப்பு!
அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி நாளை, பாபநாசம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பாபநாசம்,கபிஸ்தலம் பகுதிகள் மற்றும் சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.