தமிழகத்தில் நாளை (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை? முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 19ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 18ம் தேதி அன்று பள்ளிகளுக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பள்ளி திறப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் திறக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி தற்போது கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த 3 வருடங்களாக நடத்தப்படாமல் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வருகிற 19ம் தேதி அன்று நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்கள் கவனத்திற்கு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!
அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க ஏதுவாக பிப்ரவரி 19ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த விதிமுறையை மீறி செயல்படும் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் வாக்குச்சாவடிகள் அமைத்தல் உள்ளிட்ட தேர்தல் பணிகள் நடைபெறும்.
TNPSC குரூப் 2, 2A தேர்வில் 5831 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு & முழு விபரம் இதோ!
அத்துடன் இதில் பள்ளி ஆசிரியர்களும் ஈடுபடுத்தப்படுவார்கள். அதனால் மீண்டும் பள்ளிகளுக்கு பிப்ரவரி 19 முதல் 22ம் தேதி தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து 18ம் தேதி அன்று தேர்தல் பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட உள்ளது. அதனால் பள்ளிகளில் 50% மேல் ஆசிரியர்கள் தேர்தல் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்கள் எனில் அந்த பள்ளிகளுக்கு மட்டும் பிப்ரவரி 18ம் தேதி அன்று விடுமுறை வழங்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் தேர்தல் பயிற்சியில் ஈடுபடாத ஆசிரியர்களை கொண்டு வழக்கம் போல் மற்ற பள்ளிகள் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.