TNPSC குரூப் 2, 2A தேர்வில் 5831 காலிப்பணியிடங்கள் – கல்வித்தகுதி, வயது வரம்பு & முழு விபரம் இதோ!
தமிழகத்தில் அரசு பணிகள் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, 2A பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரூப் 2A தேர்வின் கீழ் 5,831 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குரூப்2, 2A :
தமிழகத்தில் அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் எண்ணிக்கையை அரசு பணிகள் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது. மேலும் இந்தாண்டு 32 போட்டித்தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் முதல் கட்டமாக அதிக தேர்வர்கள் எழுத கூடிய குரூப்2, 2A ,4 & VAO தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 2 தேர்வின் கீழ் 5831 காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், குரூப் 4 & VAO தேர்வின் கீழ் 5255 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாவும் TNPSC தேர்வாணையம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து இந்த மாதம் குரூப் 2 தேர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
இதனையடுத்து குரூப் 2 தேர்வை எழுத உள்ளவர்கள் அறிவிப்பை எதிர்பார்த்து வருகின்றனர். இந்த குரூப் 2 தேர்வானது நகராட்சி ஆணையர், துணை வணிகவரி அதிகாரி, சார் பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர் உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அலுவலர் என பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்படுகிறது.
தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை – உள்ளாட்சி தேர்தல் எதிரொலி!
மேற்கண்ட பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்வை எழுத உள்ளோர் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். தற்போது இறுதி ஆண்டு படிப்பவர்களும் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். முதல் கட்ட எழுத்து தேர்வு, இறுதித்தேர்வு, நேர்கானல் ஆகியவற்றின் மூலம் தகுதியானோர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதியானது பணிகளை பொறுத்து மாறுபடும். அதாவது தனிப்பட்ட எழுத்தர் பதவிக்கு விண்ணப்பிக்க தட்டச்சு முடித்திருக்க வேண்டும்.