தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆனது பிப்ரவரி 16ஆம் தேதி அன்று நடக்க உள்ளது குறித்து மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழக அரசு மாவட்டம் தோறும் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பில் அதிக அளவிலான வேலை வாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி வருகிறது. அரசு துறைகளை தவிர்த்து தனியார் துறைகளில் உள்ள வேலை நாடுனர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்களுக்கு இடையில் அருமையான வாய்ப்புகளை உருவாக்கி குறிக்கிறது. அந்த வகையில் வரும் 16ஆம் தேதி அன்று காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு மையம் சார்பாக காஞ்சிபுரம் திருமலை பாலிடெக்னிக் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 உதவித்தொகை – அமைச்சரவை ஒப்புதல்!
18 முதல் 35 வயதுக்கு உட்பட்ட எந்தவித கல்வித் தகுதி கொண்ட நபர்களும் இந்த முகாமில் தங்கள் அசல் சான்றிதழ்களுடன் காலை 10 மணிக்கு முகாம் நடைபெறும் இடத்திற்கு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பு முகாம் குறித்த தகவல்களை 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.