இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? சதமடித்த ஓமைக்ரான் தொற்று! பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று இதுவரை 100 பேருக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்படுமா என்று எழும் கேள்விகளுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
முழு ஊரடங்கு
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோய் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் பல்வேறு உலக நாடுகள் ஆக்கிரமிக்க துவங்கியது. எளிதில் பரவக்கூடிய தொற்று நோயாக கருதப்பட்ட இவ்வகை கொரோனா வைரஸை தடுக்கும் விதமாக முழு ஊரடங்கு என்கிற ஆயுதத்தை கையில் எடுத்தது பல்வேறு உலக நாடுகள். எக்கச்சக்கமான பாதிப்புகள், உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருந்த இந்த தொற்று நோய் ஊரடங்கு மூலம் ஒரு வழியாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், இந்த வைரஸ் உருமாறுவதாக கண்டறியப்பட்டது.
மேலும் இவை அடுத்தடுத்த பேரலையாக உருவாகக்கூடும் என்றும் உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. அதே போல கொரோனா பேரலை தாக்கம் பல்வேறு வடிவங்களில் உலக நாடுகளில் இன்றளவும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு அதை செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் மாறுபாடு, இதுவரை 90க்கும் மேற்பட்ட உலக நாடுகளை ஆக்கிரமித்துள்ளது.
இந்த ஒமிக்ரான் வைரஸ் மற்ற கொரோனா வைரஸ், டெல்டா வகையை விட வீரியம் மிக்கதாகவும், அதிவேகமாக பரவக்கூடிய தன்மை கொண்டதாகவும் WHO எச்சரித்துள்ளது. இந்தியாவிலும் கடந்த வாரத்தில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு தற்போது 100ஐ தாண்டி இருக்கிறது. இதன் மூலம் மீண்டுமாக நாடு தழுவிய பொது முடக்கம் அறிவிக்கப்படுமா என்கிற சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இப்போது ஒமிக்ரான் பரவல் உச்சத்தில் உள்ள இங்கிலாந்து பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதில் முன்னுரிமை கொடுத்து வருகிறது.
12ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு – தகுதி, சம்பள விபரங்கள்!
மேலும், டென்மார்க் நாட்டை பொருத்தளவு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட இருக்கிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் நோய் தொற்று அதிகளவு பரவும் நிலையில், அது வீரியம் மிக்கதாக இல்லை என்று அந்நாட்டு அரசு குறிப்பிட்டுள்ளது. தொடர்ந்து நோய் பாதிப்புக்குரிய அச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் பண்டிகை காலங்களில் மக்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் என எச்சரித்து வருகிறது.
ஆஸ்திரேலியா அரசு, தடுப்பூசி பணி போடும் பணிகளை அதிகரிக்க இருப்பதாகவும், தளர்வுகளை அதிகரிக்கவும் திட்டமிட்டு வருகிறது. என்றாலும் கொரோனாவுடன் வாழப் பழகுகிறோம், அது நம்மை மிஞ்சிவிடக்கூடாது என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்தியாவில் தற்போது தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஒமிக்ரான் பாதிப்பால் மருத்துவமனை நிரம்பினால் மட்டுமே ஊரடங்கு குறித்து அரசு முடிவு எடுக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.