12ம் வகுப்பு முடித்த பெண்களுக்கு ரயில்வேயில் வேலைவாய்ப்பு – தகுதி, சம்பள விபரங்கள்!
இந்தியாவில் ரயிலின் ஒரு பெட்டியில் ரயில் தொகுப்பாளினியாக நியமிக்க உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார். இப்பணி குறித்த அனைத்து தகவல்களையும் இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.
ரயில் தொகுப்பாளி:
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்றால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் ரயில் நிலையங்களில் பயணிகள் வருகை குறைந்தது. இதனால் ரயில்வேத்துறை பெரும் சரிவை சந்தித்தது. அதன் பிறகு கொரோனா பரவல் குறைந்து வந்த போது ரயில்வேத்துறை கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில் நிலையங்களில் பயணிகளுக்கான அரசு தொற்று தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை அறிவித்து பணிகள் வருகைக்கு அனுமதி அளித்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைந்து வந்ததை அடுத்து வழக்கம் போல ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
பிறந்த குழந்தைக்கும் இனி ஆதார் கார்டு – UIDAI புதிய திட்டம்!
இந்த நிலையில் ரயில் தொகுப்பாளினி பணி நியமனத்தை ரயில்வே தொடங்கியுள்ளது.அதிகாரியின் தகவல் படி, பிரீமியம் ரயில்களில் பணிப்பெண்கள் நியமிக்கப்படுவார்கள். இவர்களின் வேலை , பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதாகும், அவர்கள் பயணிகளை ஏறுவதற்கும் இறங்குவதற்கும் அவர்களின் இருக்கைகளுக்கு உணவு மற்றும் தேவையான பொருட்களை வழங்குவதற்கு இவர்கள் உதவுவார்கள்.ரயிலின் ஒரு பெட்டியில் ஒரு பெண்ணையும் ஒரு ஆணையும் ரயில் தொகுப்பாளினியாக நியமிக்க உள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள் – அமைச்சர் விளக்கம்!
மேலும் ஏர் ஹோஸ்டஸ் அகாடமி மூலம் ரயில் தொகுப்பாளினி ஆட்சேர்ப்பைத் தொடங்கியுள்ளது. ரயில் பணிப்பெண்களுக்கு, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் ஹிந்தி மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகள் தெரிந்திருக்க வேண்டும். இப்பணிக்கு ஓராண்டு பட்ட படிப்பு அவசியமாகும். மேலும் தொகுப்பாளினி பணிக்கு வயது வரம்பு இல்லை. ரயில் பணிப்பெண்ணின் ஆரம்ப சம்பளம் சுமார் 25 ஆயிரம் ரூபாய் ஆகும் முதற்கட்டமாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், கதிமான் எக்ஸ்பிரஸ் மற்றும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் போன்ற பிரீமியம் ரயில்கள் இந்த சேவை கிடைக்கும் என்று ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.