தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் 6- 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு 2022 ஜனவரி மாதம் முதல் சுழற்சி முறை இன்றி வகுப்புகள் நடத்தப்பட்டாலும் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தொடரும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நேரடி வகுப்புகள்:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. கடந்த கல்வியாண்டில் கொரோனா அச்சம் காரணமாக 10,11, 12 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் 10,11,12ம் வகுப்புகளுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 10,12ம் வகுப்புகளுக்கு தற்போது திருப்புதல் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.
பொதுமக்கள் அடுத்த 10 நாட்களுக்கு சிரிக்க, மது அருந்த தடை – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
2021 – 2022 ம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாட சுமையை குறைக்க பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தஞ்சாவூர் ஆட்சியரகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், ஜனவரி 3 ஆம் தேதி முதல் சுழற்சி முறையின்றி தொடர்ச்சியாக வகுப்புகள் நடத்தப்படவுள்ளது.
மாநில அரசு ஊழியர்களுக்கு ரூ.25,000 பண்டிகை கால முன்பணம் – ஜாக்பாட் அறிவிப்பு!
ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா காலத்துக்குரிய வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 2021 – 22 ஆம் கல்வியாண்டில் 5.35 லட்சம் புதிய மாணவா்கள் அரசு பள்ளியில் சோ்ந்துள்ளனா். அரசுப் பள்ளிகளில் ஏற்கனவே 66 லட்சம் மாணவ, மாணவிகள் இருந்த நிலையில், இப்போது, 71 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த மாணவர்கள் விகிதப்படி ஆசிரியர்களை நியமிக்கும் கடமை எங்களுக்கு இருக்கிறது.