இந்தியாவில் கொரோனா 4வது அலை பரவல் அச்சம் – விஞ்ஞானிகள் விளக்கம்!
இந்திய நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து அடுத்த அலை உருவாக வாய்ப்பு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் முன்னாள் இயக்குனர் தலைமை விஞ்ஞானி கங்காகேத்கர் அறிவித்து உள்ளார். இதனால் மக்கள் அனைவரும் மீண்டும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
மீண்டும் கொரோனா:
உலகில் உள்ள நாடுகள் அனைத்திலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பிறந்த நாடு சீனாவில் உள்ள வூகான் பகுதியில், கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில், கோவிட் – 19 என்று அழைக்கப்படும் கொரோனா தொற்று மிகவும் மோசமான நிலையில் பரவியது. மேலும் நமது நாடான இந்தியாவிலும் ஊரடங்குகள் அறிவிக்கப்பட்டு மிகவும் பாதுகாப்பாக மக்களை வைத்து வந்தனர். இந்நிலையில் அடுத்தாக ஐரோப்பிய நாடான பிரிட்டனில், ஒமைக்ரான் தொற்றின் திரிபான XE வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது அதி வேகமாக பரவக் கூடியது என்றும் கூறியுள்ளனர். மேலும், மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் வதோதராவுக்கு வந்த முதியவர் ஒருவருக்கு இந்த புது வகை வைரஸ் பாதிக்கப்பட்டு உள்ளது.
ExamsDaily Mobile App Download
மேலும் சமீபத்தில் இந்திய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் புள்ளி விவரங்கள்படி, நாடு முழுவதும் ஒரே நாளில் மட்டும் 2,183 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் இது சமீபத்திய கொரோனா பாதிப்பை காட்டிலும் 90 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,44,280 ஆக உயர்ந்துள்ளது என்றும் கூறியுள்ளனர். அதனை தொடர்ந்து தற்போது உலகம் முழுவதும் BA2 வகை கொரோனா தொற்று ஒவ்வொரு நாளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
ஏப்ரல் மாதத்தில் இன்னும் 4 நாட்களுக்கு வங்கிகள் அடைப்பு – முழு பட்டியல் இதோ!
இந்நிலையில் தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் இயக்குனர் தலைமை விஞ்ஞானி கங்காகேத்கர் 4 ஆம் அலை குறித்து தெரிவித்து உள்ளார். அது என்னவென்றால், இந்தியாவில் ஓமிக்ரோன் மாறுபாட்டின் துணை திரிபுகள் இருந்தாலும் புதிய திரிபு எதுவும் இல்லை என்பதால் 4வது அலைக்கான வாய்ப்பு இல்லை என்றும், மேலும் இந்த பரவலுக்கு காரணம் சென்ற ஆண்டு இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க பட்டதாலும், மேலும் மக்களும் அவரவர் விருப்பத்திற்கு மாஸ்க் அணியாமல் கொரோனா விதிகளை கடைபிடிக்காமல் நடந்து கொண்ட காரணத்தால் பரவல் அதிகமாகி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.