FD கணக்கு வைத்துள்ளவர்களுக்கு அதிக லாபம் – வட்டி விகிதம் உயர்வு! மூத்த குடிமக்களுக்கு சலுகை!
இந்தியாவில் மத்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனையடுத்து வீட்டு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. மற்றொரு புறம் சேமிப்பு திட்டங்கள் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு சலுகைகளும் கிடைக்கிறது.
பிக்செட் டெபாசிட் திட்டம்:
இந்தியாவில் கொரோனா பேரிடருக்கு பிறகு வங்கிகள், அஞ்சலகங்கள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் பல வகையான முதலீட்டு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. மக்கள் முதலீடு செய்யும் பணத்திற்கு போதிய பாதுகாப்பு இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மேலும் ரிஸ்க் இல்லாத முதலீடுகளில் சேரவே அதிகமானனோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் சிறந்த தேர்வாகும். ஒரு நபர் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை இதில் முதலீடு செய்யலாம்.
மேலும் முதிர்வு காலத்தில் நீங்கள் உங்களின் முதலீட்டுடன் சேர்ந்து அதற்கான மொத்த வட்டித்தொகையையும் பெறலாம். கடந்த மாதம் மத்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 5.4 சதவீதத்தில் இருந்து 5.90 % ஆக உயர்த்தியுள்ளது. அதனால் பிக்செட் டெபாசிட் திட்டத்தின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு அதிக சலுகைகளும் அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வட்டி விகிதம் வங்கிகளை பொறுத்து மாறுபடுகிறது.
அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் கவனத்திற்கு – இதனை கட்டாயம் செய்யுங்கள்!! அதிரடி உத்தரவு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் AU Small Finance Bank வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 60 புள்ளிகள் உயர்த்தி 7.5% ஆக அதிகரித்துள்ளது. மேலும் இத்திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பிக்சட் டெபாசிட் (FD) முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அண்மையில் பிரபல தனியார் வங்கியான பெடரல் வங்கி பிக்சட் டெபாசிட் திட்டத்தின் (FD) வட்டி விகிதத்தை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்