PM-KISAN திட்ட விவசாயிகள் பணத்தினை திருப்பி தர அறிவுறுத்தல்? ஷாக் அறிவிப்பு வெளியீடு!

0
PM-KISAN திட்ட விவசாயிகள் பணத்தினை திருப்பி தர அறிவுறுத்தல்? ஷாக் அறிவிப்பு வெளியீடு!
PM-KISAN திட்ட விவசாயிகள் பணத்தினை திருப்பி தர அறிவுறுத்தல்? ஷாக் அறிவிப்பு வெளியீடு!
PM-KISAN திட்ட விவசாயிகள் பணத்தினை திருப்பி தர அறிவுறுத்தல்? ஷாக் அறிவிப்பு வெளியீடு!

pm-kisan திட்டத்தின் மூலமாக தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவி பெற்று வந்தால் அந்த பணத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

PM-KISAN திட்டம்:

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியுதவி திட்டத்தின் மூலமாக இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் பலரும் பயனடைந்து வருகின்றனர். அதாவது நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூபாய் 2000 வீதம் ஒரு வருடத்திற்கு 6000 வரைக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரைக்கும் இந்த திட்டத்தின் மூலமாக 11 தவணைக்கான நிதியுதவியைப் பெற்று விட்ட நிலையில் 12 ஆவது தவணையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

UGC NET தேர்விற்கான கால அட்டவணை வெளியீடு – தேர்வர்கள் கவனத்திற்கு!

மேலும், தகுதியற்ற விவசாயிகளும் pm-kisan திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது உத்திரப்பிரதேச மாநிலத்தில் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட 21 லட்சம் விவசாயிகள் தகுதியற்றவர்கள் என விசாரணையில் தெளிவாகியுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தில் உள்ள கணவன் மனைவி இருவரும் இந்த திட்டத்தின் மூலமாக பயன் பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது. இதனால், இதுவரைக்கும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி பணம் திரும்பப் பெறப்படும் என அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது எப்படி தகுதியற்ற விவசாயிகள் பெற்ற தொகையை திருப்பி கொடுப்பது என்பது குறித்தான விளக்கத்தைப் பார்க்கலாம். முதலில் pm-kisan திட்டத்திற்கான அதிகாரப்பூர்வமான இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் திரும்பப் பெறு என்ற பகுதியை கிளிக் செய்யவும். ஆன்லைனில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும் என்ற பகுதியை கிளிக் செய்யவும். பின்னர், ஆதார் எண், கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றிற்கான அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தரவை பெரு என்கிற பகுதியை கிளிக் செய்து நீங்கள் திரும்ப தர வேண்டிய அனைத்து விவரங்களையும் அந்த பக்கத்தில் காணலாம்.

பின்னர் ரீபண்ட் பேமெண்ட் என்கிற பகுதியை கிளிக் செய்து மெயில் ஐடி மற்றும் தொடர்பு விவரங்கள் அனைத்தையும் உறுதிப்படுத்தவேண்டும். பணத்தை திரும்பப் பெறுவதற்கான அனைத்து விவரங்களையும் உறுதிப்படுத்திய பின்னர் பணம் செலுத்தும் பக்கத்தின் பகுதிக்கு கீழ் உள்ள பகுதிக்கு சென்று பணத்தை எந்த வங்கியின் மூலமாக செலுத்த போகிறீர்களோ அதனை செலுத்தி இதுவரை வாங்கி வந்த தொகையை திரும்ப கொடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!