ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை? முக்கிய அறிவிப்பு!
கொரோனா காலகட்டத்திற்கு முன்பு ரயிலில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. தற்போது மீண்டும் அந்த சலுகையை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கட்டண சலுகை:
பேருந்துகளை காட்டிலும் ரயில்களில் தான் கட்டணம் குறைவு, கழிப்பறை வசதி உள்ளிட்ட வசதிகள் இருப்பதால் பொதுமக்கள் அதிகமாக ரயில்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். அதிலும், ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, கொரோனா கால கட்டத்திற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரைக்கும் கட்டண சலுகை வழங்கப்பட்டு வந்தது. அதற்கு பின்பு, இந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், மூத்த குடிமக்களுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையிலான கட்டண சலுகையை மீண்டும் கொண்டு வருவதற்கு ரயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை அறவே தகர்த்துவிட்டு ரயில்வே நிர்வாகம் மாற்றுத் திறனாளிகள், 11 வகையான நோயாளிகள், மாணவர்கள் ஆகியோர்களுக்கு கட்டண சலுகை வழங்கி வருகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்து செய்ததை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நாடாளுமன்ற நிலைக்குழு மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
விமானங்களில் டிக்கெட் கட்டண சேவைகளுக்கான கட்டண வரம்பு ரத்து – மத்திய அரசு அறிவிப்பு
இது மட்டுமல்லாமல் பல்வேறு வகையான ரயில்வே பயணிகளுக்கும் நியாயமான கட்டண சலுகை வழங்கப்பட வேண்டும் என்பது குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கொரோனா காலகட்டத்திற்கு முன்பு மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகைகளில் குறைந்தபட்சமாக படுக்கை வசதி மற்றும் 3-ம் வகுப்பு ஏ.சி.பெட்டிகளில் பயணிப்போருக்கு கட்டண சலுகை ஆகியவை குறித்தாவது பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியுள்ளது.