ஜீ தமிழில் களமிறங்கும் புத்தம் புதிய சீரியல் ‘ரஜினி’ – ப்ரோமோ ரிலீஸ்! உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சின்னத்திரையில் முதன்மையான இடத்தை வகித்து வரும் ஜீ தமிழ் டிவியில் ‘ரஜினி’ என்ற புத்தம் புதிய சீரியல் ஒன்று ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ப்ரோமோ ஒன்று தற்போது வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
புதிய சீரியல்
பொதுவாக டிவி சேனல்களில் ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை இடைவிடாமல் ஒளிபரப்பாவது சீரியல்கள் மட்டும் தான். அதனால் தான் இந்த சீரியல்கள், மக்களின் முக்கிய பொழுதுபோக்காக இருந்து வருகிறது. இதில் மக்களின் மனம் கவர்ந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் ஒரு சில சீரியல்கள் மட்டும் கிட்டத்தட்ட 3 அல்லது 4 ஆண்டுகள் வரை பயணிப்பது உண்டு. பிறகு அந்த சீரியல் முடிவடைந்தவுடன் அதற்கு பதிலாக புதிய சீரியல்கள் ஒளிபரப்பாகும்.
கண்ணம்மாவுடன் சந்தோசமாக வாழ தொடங்கும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’அடுத்து வரும் திருப்பங்கள்!
அந்த வகையில் சமீப காலமாக தமிழ் சின்னத்திரையில் பழைய சீரியல்கள் முடிவடைந்து புத்தம் புதிய சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதுவும் சீரியல்களுக்கு பெயர் போன விஜய், ஜீ தமிழ், கலர்ஸ் ஆகிய சேனல்களில் பல புதிய சீரியல்கள் இடம்பிடித்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது ஜீ தமிழ் டிவி ‘ரஜினி’ என்ற சீரியலை களமிறக்கி இருக்கிறது. அதாவது, குடும்பத்திற்காக மட்டுமே வாழும் ரஜினி என்ற ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தொடரில் ரஜினி என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகை ஷ்ரேயா அஞ்சன் நடிக்கிறார்.
இவருக்கு ஒரு அக்கா, தங்கைகள், தம்பி என பெரிய குடும்பம் இருக்கிறது. இவர்களின் செலவுகளை ஒருவராக இருந்து பொறுப்பேற்று கொள்கிறார் ரஜினி. இது தவிர தான் உயிருக்கு உயிராக நேசித்த காதலனை கூட தனது தங்கைக்காக விட்டுக்கொடுக்கும் ஒரு கனமான கதாப்பாத்திரமாகவும் இந்த ‘ரஜினி’ சீரியல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது இந்த சீரியல் தொடர்பான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. மேலும் இத்தொடர் சன் டிவியின் ‘கயல்’ சீரியலை நினைப்பூட்டுவதாகவும் சிலர் குறிப்பிட்டு வருகின்றனர்.