கண்ணம்மாவை புரிந்து கொள்ளாத பாரதி, அஞ்சலியை கடத்திய ரௌடியை பார்த்த அகில் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி தன்னுடைய போனை காணாமல் தேட கண்ணம்மா தெரியாமல் எடுத்துவிடுகிறார். அப்போது கோவப்பட்ட பாரதி கண்ணம்மாவை பணம் கொடுக்கிறேன் நீ சென்றுவிடு என சொல்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி வேலை பார்த்துக் கொண்டிருக்க கண்ணம்மா சாப்பிட சொல்கிறார். பாரதி இப்போது வேண்டாம் என சொல்ல, கண்ணம்மா வேண்டும் என்றால் எடுத்துவைத்து சாப்பிடுங்க நான் குளிக்க போகிறேன் என சொல்லி பாரதி போனை மாற்றி எடுத்து செல்கிறார். அப்போது பாரதி போனை தேட கண்ணம்மா போன் மட்டும் இருக்கிறது. அதை எடுத்து அவர் நம்பருக்கு போன் செய்கிறார். போன் சத்தம் எங்கிருந்து வருகிறது என பார்க்க அது பாத்ரூமில் இருந்து வருகிறது.
பாரதி பாத்ரூம் பக்கமாக நிற்க வெளியே வந்த கண்ணம்மா என்ன இப்படி நிற்கிறீர்கள் என கேட்கிறார். என் போனை எதற்கு நீ கொண்டு சென்றாய் என பாரதி கோவப்பட தெரியாமல் கொண்டு சென்றேன் என கண்ணம்மா சொல்கிறார். பாரதிக்கு பயங்கரமாக கோவம் வர கண்ணம்மாவிடம் உனக்கு மூன்று தலைமுறைக்கு தேவையான பணத்தை கொடுக்கிறேன் நீ சென்றுவிடு என சொல்கிறார். அப்போது கண்ணம்மா நான் பணம் வாங்கி சென்றிருந்தால் உங்க அம்மா எப்பவோ தரேன் என சொன்னார்கள் நான் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்.
டிச.12 முதல் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? அரசு விளக்கம்!
எனக்கு தேவை என் மகளுக்கு அப்பா தான் எப்போது தான் என்னை புரிந்து கொள்ள போறீங்க என கண்ணம்மா கேட்கிறார். மறுபக்கம் அகிலை சௌந்தர்யா தேட அவன் வெளியே சென்றிருக்கிறான் என வேணு போன் செய்கிறார். ஆனால் அகில் போனை எடுக்கவில்லை. பின் லட்சுமி சாமியிடம் தீவிரமாக வேண்டிக் கொள்கிறாள். அதை பார்த்த சௌந்தர்யா என்ன வேண்டிக் கொள்கிறாய் என கேட்கிறார். அம்மா நானும் அப்பா இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இப்போது நானும் இங்கே வந்துவிட்டேன் அம்மா அங்கே தனியாக இருப்பாங்க என லட்சுமி சொல்ல, நானும் பல நாட்களாக சாமியிடம் வேண்டுகிறேன் ஆனால் அப்பா வரவே மாட்டேங்குறாரு என சொல்கிறார். அதை கேட்டு சௌந்தர்யா வருத்தப்படுகிறார்.
சரவணனை சமையல் போட்டியில் ஜெயிக்க விடாமல் செய்யும் அர்ச்சனாவின் சதி திட்டம் – ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!
பின் ஹேமா வர இருவரும் பள்ளி கிளம்புகின்றனர். பின் அகில் ரோடில் ஒருவர் மீதுஸ் சேறு அடிக்க, கிழே வந்து சாரி கேட்கிறார். அப்போது அது அஞ்சலியை கடத்திய அடியாட்களில் ஒருவன் என தெரிந்து துரத்தி செல்கிறார். ஆனால் அவன் தப்பித்து ஓடிவிட அகில் மீது சேறு ஆகிவிடுகிறது. அகில் அதோடு வீட்டிற்கு வர என்ன நடந்தது என அஞ்சலி சௌந்தர்யா கேட்கின்றனர். அஞ்சலியை கடத்தியவனை பார்த்தேன் என சொல்ல ஏன் இப்படி செய்தாய் போலீசிடம் சொல்லியாச்சு அவங்க பார்த்துக் கொள்வார்கள் என அஞ்சலி சொல்கிறார். உனக்கு ஒரு குழந்தை இருக்கிறது அது தான் இனிமேல் முக்கியம் என அஞ்சலி சொல்ல, அந்த நிலைமையில் உன்னை கடத்தியவனை நான் சும்மா விடமாட்டேன் என அகில் சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.