FD கணக்கு வைத்துள்ளீர்களா? அதிரடி முடிவை வெளியிட்ட பிரபல வங்கிகள்! விவரம் இதோ!
இந்தியாவில் வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மக்கள் எதிர்காலத்தில் பயன்பெறும் வகையில் ஏராளமான சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக மூத்த குடிமக்களுக்காக சிறந்த சலுகைகளும் இத்திட்டங்களில் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முக்கிய வங்கிகள் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
நிலையான வைப்புத்தொகை திட்டம்:
நிலையான வைப்புத்தொகை (Fixed deposit) ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீட்டு திட்டமாகும். ஏனெனில் இந்த திட்டத்தில் இருந்து கிடைக்க கூடிய வருமானம் உறுதியானது. மேலும் பங்கு சந்தை ஏற்ற இறக்கங்களின் போதும் பாதிக்கப்படாது. இதில் கூடுதலாக வட்டி விகிதங்களும் கிடைக்கிறது. இந்த நிலையான வைப்புத்தொகை திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு சிறப்பு வட்டி விகிதம், வருமான வரி விலக்கு போன்ற சலுகைகள் அளிக்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
இதில் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை விட மூத்த குடிமக்களுக்கு 1 சதவீதம் அதிக வட்டி கிடைக்கும். இத்தகைய மூத்த குடிமக்கள் சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டம் எச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, எஸ்பிஐ ஆகிய வங்கிகளில் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த நிலையில் எச்டிஎஃப்சி, ஐடிபிஐ ஆகிய வங்கிகளில் அக்டோபர் 1ம் தேதி முதல் மூத்த குடிமக்கள் சிறப்பு நிரந்தர வைப்புத் திட்டத்தை முடிவுக்கு கொண்டு வர உள்ளது.
ரயில் பயணிகள் கவனத்திற்கு.. இன்று முதல் மின்சார ரயில் சேவைகள் ரத்து – தெற்கு ரயில்வே அறிக்கை!
Exams Daily Mobile App Download
கடந்த ஆகஸ்ட் மாதம் தனியார் வங்கியான எச்டிஎஃப்சி சுமார் 2 கோடிக்கு கீழ் உள்ள நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வங்கியானது சீனியர் சிட்டிசன் கேர் எஃப்டி’ என்ற திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இதில் 0.25 சதவீதம் கூடுதல் பிரீமியம் வழங்கப்படுகிறது. இதன் கால அளவு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள். மேலும் வட்டி விகிதம் 6.25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்