இந்தியாவில் தீவிரமெடுக்கும் ஓமைக்ரான் பரவல் – 5 பேருக்கு தொற்று உறுதி! பொதுமக்கள் அச்சம்!
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உருமாறி ஒமைக்ரான் வைரஸாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் இதுவரை 5 பேருக்கு இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ்:
உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அதன் பின் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச விமானங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 24-ந் தேதி முதல் முறையாக ஒமைக்ரான் வைரஸ் கண்டறியப்பட்டது. தொடக்கத்தில் அண்டை நாடுகளில் இதன் தாக்கம் இருந்த நிலையில் தற்போது பல நாடுகளில் இந்த வைரஸ் பரவி உள்ளது.
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இதுவரை உலகம் முழுவதும் 38 நாடுகளுக்கு பரவி உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கம் பரவாத வகையில் அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணிகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளன. இருந்தாலும் இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. கர்நாடகாவில் இருவருக்கும், குஜாரத், மராட்டியத்தில் தலா ஒருவருக்கும் என மொத்தம் 4 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – இனி பொருட்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள்!
ஆனால் தற்போது டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் இந்த வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் படி இதுவரை இந்தியாவில் ஒமைக்ரான் வைரஸால் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர் தான்சானியாவில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். அவர் தற்போது டெல்லியில் உள்ள எல்என்ஜேபி-யில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் டெல்லியில் இது வரை 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயின் தெரிவித்துள்ளார். அவர்களில் ஒமைக்ரான் வைரஸ் தாக்கம் இருக்கிறதா என தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .