தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

0
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!

தமிழகத்தில் பரவலாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்றும், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கடுமையான கனமழை கொட்டித்தீர்க்கும் என்று அறிவித்துள்ளது.

வானிலை அறிக்கை:

தென்‌ தமிழக பகுதிகளில்‌ நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக,

05.12.2021: திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்‌, கன்னியாகுமரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய தென்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்‌சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ (திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, தர்மபுரி) ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

06.12.2021: தென்‌ மாவட்டங்கள்‌, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ (திருப்பூர்‌, ஈரோடு, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, தர்மபுரி) ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்‌.

07.12.2021: தென்‌ கடலோர மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலும்‌ வறண்ட வானிலையே நிலவும்‌.

08.12.2021: கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

09.12.2021: கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை,

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கும்‌.

கடந்த 24 மணி நேரத்தில்‌ பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்‌):

கொடுமுடி (ஈரோடு), ஆனைபாளயம்‌ (கரூர்‌ தலா 9, கோவை 7, எட்டயபுரம்‌ (தூத்துக்குடி) 6, நாங்குநேரி (திருநெல்வேலி), மோகனுர்‌ (நாமக்கல்‌), வெம்பக்கோட்டை (விருதுநகர்‌) , சின்னக்கல்லார்‌ (கோவை) தலா 5, பஞ்சப்பட்டி (கரூர்‌) , பூதப்பாண்டி (கன்னியாகுமாரி) , வீரபாண்டி (தேனி , சிவகாசி (விருதுநகர்‌), உடுமலைபேட்‌டை (திருப்பூர்‌) தலா 4, ஆண்டிபட்டி (தேனி, கரூர்‌, போடிநாயக்கனுர்‌ (தேனி, ஸ்ரீவில்லிபுத்தூர்‌ (விருதுநகர்‌), தல்லாகுளம்‌ (மதுரை) , மாயனுர்‌ (கரூர்‌) , சாத்தூர்‌ (விருதுநகர்‌) , ராதாபுரம்‌ (திருநெல்வேலி), ஈரோடு தலா 3, அரவக்குறிச்சி (கரூர்‌), உத்தமபாளையம்‌ (தேனி , கிருஷ்ணராயபுரம்‌ (கரூர்‌) , சோழவந்தான்‌ (மதுரை) , மைலாடி (கன்னியாகுமாரி), ராமநாதபுரம்‌, மேட்டுப்பட்டி (மதுரை) , குன்னூர்‌ (நீலகிரி) , குமாரபாளையம்‌ (நாமக்கல்‌) , சேந்தமங்கலம்‌ (நாமக்கல்‌) தலா 2, கொடைக்கானல்‌ (திண்டுக்கல்‌) , வேடசந்தூர்‌ (திண்டுக்கல்‌) , நாமக்கல்‌ குழித்துறை (கன்னியாகுமாரி) , பரமத்திவேலூர்‌ (நாமக்கல்‌) , வாடிப்பட்டி (மதுரை , பெரியகுளம்‌ (தேனி, தூத்துக்குடி , சிட்டம்பட்டி (மதுரை) , வால்பாறை தாலுகா
அலுவலகம்‌ (கோவை, முதுகுளத்தூர்‌ (ராமநாதபுரம்‌) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வங்க கடல்‌ பகுதிகள்‌

மத்திய மேற்கு வங்கக்‌ கடல்‌ பகுதியில்‌ நிலவும்‌ தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம்‌ அடுத்த 6 மணி நேரத்தில்‌ வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரிசா கடற்கரையோரம்‌ நிலைகொள்ளும்‌.

இதன்‌ காரணமாக;

05.12.2021: வட மேற்கு வங்க கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மத்‌திய மேற்கு வங்க கடல்‌ பகுதிகள்‌, ஒரிசா கடலோர பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌, இடையிடையே 60 கிலோமீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்‌ என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!