தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – இனி பொருட்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு - இனி பொருட்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு - இனி பொருட்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் அறிவிப்பு – இனி பொருட்கள் வழங்குவதில் கட்டுப்பாடுகள்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து மக்கள் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம் பரவி வரும் நிலையில், கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேஷன் பொருள்கள் வழங்க கூடாது என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரேஷன் கடைகள்:

கொரோனா வைரஸ் பல வளர்ந்த நாடுகளை கூட விட்டுவைக்கவில்லை. அந்த அளவிற்கு அதன் வீரியம் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா வைரஸ் அனைத்து நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணி அதிகரித்ததை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா தாக்கம் குறைந்துள்ளது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து பல தளர்வுகள் வழங்கப்பட்டு மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். பள்ளிகள் தற்போது தான் திறக்கப்பட்டு குழந்தைகள் வழக்கம் போல வகுப்புகளை கவனித்து வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வெளியே செல்ல தடை, கட்டாய சட்டம் அமல் – அரசு அதிரடி அறிவிப்பு!

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் புதிதாக உருமாறிய கொரோனா வைரஸான ஓமிக்ரான் பரவி வருகிறது. அதன் தாக்கம் இந்தியா வரை வந்து இதுவரை 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படாத வண்ணம் பல நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்துள்ளது. அதன் படி, விமான நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளை, மதுரை உள்ளிட்ட மாவட்ட நிர்வாகங்கள் அறிவித்துள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசி போடுவதை துரிதப்படுத்த வாரத்தில் ஒரு நாள் மெகா தடுப்பூசி முகாம் இருந்ததை இரண்டு நாட்கள் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

விஜய் டிவி புது கண்ணம்மா வினுஷாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்களை நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து தமிழக பதிவுத்துறை மற்றும் வணிக வரித்துறை அமைச்சர் பி. மூர்த்தி கூறுகையில், தமிழகத்தில் ரேஷன் கடைகளில் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொருள்கள் வழங்க உத்தரவிடுவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது போல பல நடவடிக்கை மூலமாக கொரோனா தடுப்பூசி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். அவ்வாறு தடுப்பூசி போடாமல் வந்தால் முதல் தடவை எச்சரிக்கை செய்யப்படும், மீண்டும் அவர் தடுப்பூசி செலுத்தாமல் வந்தால் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!