தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் ஆலோசனை!

0
தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் ஆலோசனை!
தமிழகத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள்? முதலமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கட்டுப்பாடுகள் விதிப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுப்பதற்காக நாளை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார்.

திருமண நிகழ்ச்சிகளுக்கு கட்டுப்பாடு:

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. அதாவது கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று ஏற்கனவே முதல் மற்றும் 2வது அலையை ஏற்படுத்திவிட்டது. பின்னர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்ட பின்னர் கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகையான ஒமைக்ரான் தொற்று பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த தொற்று கொரோனா 3 வது அலையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்!

அந்த வகையில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று 700க்கும் மேற்பட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஒமைக்ரான் தொற்று பரவ தொடங்கியதில் இருந்து மீண்டும் கொரோனா தொற்றும் தீவிரமாக பரவி வருகிறது. ஓமைக்ரான் பரவல் காரணமாக கொரோனா 3 வது அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு விதித்துக்கொள்ள அனுமதி வழங்கியது. அதனடிப்படையில் சில மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் மற்றும் இரவுநேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 17க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது.

Post Office இன் அதிக வட்டி தரும் சூப்பரான சேமிப்பு திட்டங்கள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

அதிலும் குறிப்பாக சென்னை, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் சற்று அதிகமாக பாதிப்பு நிலவி வருகிறது. அதனால் தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. அதனால் திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக நாளை முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த தொற்று அதிகரித்துள்ளதால் மருத்துவமனையில் 50,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும், தினசரி கொரோனா பரிசோதனை 25,000 மேற்கொள்ளும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விரைவில் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!