Post Office இன் அதிக வட்டி தரும் சூப்பரான சேமிப்பு திட்டங்கள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

0
Post Office இன் அதிக வட்டி தரும் சூப்பரான சேமிப்பு திட்டங்கள் - பொதுமக்கள் கவனத்திற்கு!
Post Office இன் அதிக வட்டி தரும் சூப்பரான சேமிப்பு திட்டங்கள் - பொதுமக்கள் கவனத்திற்கு!
Post Office இன் அதிக வட்டி தரும் சூப்பரான சேமிப்பு திட்டங்கள் – பொதுமக்கள் கவனத்திற்கு!

மத்திய அரசால் அஞ்சல் நிலையத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போஸ்ட் ஆஃபீஸின் சிறு சேமிப்பு திட்டங்களின் முழு விவரங்களும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

Post Office சேமிப்பு திட்டங்கள்:

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் மக்கள் பொருளாதார நிலையில் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர் . அதனால் தற்போது பொதுமக்கள் வங்கி மற்றும் போஸ்ட் ஆபீஸ்களில் பணத்தை சேமித்து வைக்க தொடங்கியுள்ளனர். அந்த வகையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட போஸ்ட் ஆஃபீஸின் சிறு சேமிப்பு திட்டங்கள் மக்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது. ஏனென்றால் குறைந்த மாதாந்திர தொகை செலுத்தி நல்ல வட்டியுடன் சிறப்பான முதிர்வுத் தொகையை பெறலாம். இந்த நிலையில் மற்ற சேமிப்பு முறைகளை விட இந்த மாதிரியான சிறுசேமிப்பு திட்டத்தில் எந்த ஒரு ரிஸ்க் இல்லை என மக்கள் அறிந்துள்ளனர்.

தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு – மத்திய அரசு வலியுறுத்தல்!

போஸ்ட் ஆபிஸில் உள்ள மக்களால் அதிகம் வரவேற்பு பெற்ற சிறுசேமிப்பு திட்டங்கள் டைம் டெபாசிட் திட்டம், ரெக்கரிங் டெபாசிட், பொது வருங்கால வாய்ப்பு நிதி, சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் , தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம் ஆகிய திட்டங்களாகும். இந்த திட்டங்களின் வட்டி மற்றும் சேமிப்பு தொகை விவரங்களை பார்ப்போம். இந்த நாமினேஷன் தேர்வு, மாத தொகை அனைத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பம் போல் தேர்வு செய்யவும் வசதி உள்ளது.

  • டைம் டெபாசிட் திட்டம்: நபரின் முதல் சேமிப்பு தொகை ரூ1000 ஆக தொடங்கலாம். இத்திட்டத்திற்கு 5.5% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் இரட்டிப்பு காலம் 10.75 வருடம் ஆகும்.
  • ரெக்கரிங் டெபாசிட் திட்டம்: நபரின் முதல் சேமிப்பு தொகை ரூ.100 ஆக தொடங்கலாம். இத்திட்டத்திற்கு 5.8% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் இரட்டிப்பு காலம் 12.41வருடம் ஆகும்.
  • போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம்: நபரின் முதல் சேமிப்பு தொகை ரூ. 1000 ஆக தொடங்கலாம். இத்திட்டத்திற்கு 6.6%சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் இரட்டிப்பு காலம் 10.91வருடம் ஆகும்.

தமிழகத்தில் டிச.31 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்? முதல்வர் முக ஸ்டாலின் நாளை ஆலோசனை!

  • சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம்: இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கான சிறப்பான திட்டமாகும். நபரின் முதல் சேமிப்பு தொகை ரூ. 250 ஆக தொடங்கலாம். இத்திட்டத்திற்கு 7.6% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் இரட்டிப்பு காலம் 9.47 வருடம் ஆகும்.
  • தேசிய சேமிப்பு சான்றிதழ் திட்டம்: நபரின் முதல் சேமிப்பு தொகை ரூ. 1000 ஆக தொடங்கலாம். இத்திட்டத்திற்கு 6.8% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் இரட்டிப்பு காலம் 10.59 வருடம் ஆகும்.
  • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: நபரின் முதல் சேமிப்பு தொகை ரூ. 1000 ஆக தொடங்கலாம். இத்திட்டத்திற்கு 7.4% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் இரட்டிப்பு காலம் 9.73 வருடம் ஆகும்.
  • கிசான் விகாஸ் பத்ரா திட்டம்: நபரின் முதல் சேமிப்பு தொகை ரூ. 1000 ஆக தொடங்கலாம். இத்திட்டத்திற்கு 6.9% சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இதன் இரட்டிப்பு காலம் 124 மாதங்கள் ஆகும்.

    Velaivaippu Seithigal 2022

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!