மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) நிலுவைத்தொகை – ரூ.2 லட்சம் வரை கிடைக்கும்!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டை முன்னிட்டு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிலுவைத் தொகை:
இந்தியாவில் விலைவாசிக்கு ஏற்ப அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை மத்திய அரசு கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தி வைத்திருந்தது. அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் மீண்டும் அகவிலையை வழங்க ஆரம்பித்தது. மேலும் ஜூலை மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது புத்தாண்டை முன்னிட்டு மேலும் 3% அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் சம்பள உயர்வு குறித்து அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அடிப்படை ஊதியம் 28,000 ஆக அதிகரிக்கும் என்று கூறுகின்றனர்.
Post Office இன் அதிக வட்டி தரும் சூப்பரான சேமிப்பு திட்டங்கள் – பொதுமக்கள் கவனத்திற்கு!
ஊதியம் உயர்வு கிடைத்தால் அதனை தொடர்ந்து அகவிலைப்படி மற்றும் பிற கொடுப்பனவுகளும் உயரும் இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கு அகவிலைபடியை உயர்த்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி உயர்வு அளித்துள்ளது. ஜனவரி 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கூடுதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிப்பு – மத்திய அரசு வலியுறுத்தல்!
இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி தொகை கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு கொரோனா தாக்கம் காரணமாக 18 மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவையில் உள்ளது. இது குறித்து எவ்வித அறிவிப்புகளும் வெளியாகாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தி அடைந்திருந்தனர். இந்நிலையில் புத்தாண்டில் அகவிலைப்படி நிலுவை தொகை முழுவதும் வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஊழியர்களுக்கு அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.