தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை? ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தீவிர ஆலோசனை!

0
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை? ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை? ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை? ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தீவிர ஆலோசனை!

தமிழகத்தில் வருகிற டிசம்பர் 15 ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிய உள்ளது. இந்நிலையில் தற்போது ஓமைக்காரன் வைரஸ் பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்

நாடு முழுவதும் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு உயிர் இழப்புகள் ஏற்பட்டன. அதனை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வந்தது. அதில் குறிப்பாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து வழிபாட்டு தலங்கள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா தடுப்பூசி கண்டறியப்பட்டு பொது மக்கள் அனைவராலும் செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு பல்வேறு ஊரடங்கு விதிமுறைகள் விதிக்கப்பட்டு அனைவராலும் பின்பற்றப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

விஜய் டிவி சீரியல் நடிகை ஜனனிக்கு திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அதனால் தற்போது தமிழகத்தில் 700-க்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அத்துடன் தமிழக அரசு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி வந்தன. தற்போது ஓமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவிலும் குஜராத், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் தமிழ்நாட்டில் கண்டறியப்படவில்லை. இவ்வாறு ஓமைக்ரான் பரவலை தடுப்பதற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது

தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 பொங்கல் கருணைத்தொகை? அரசுக்கு கோரிக்கை!

அதில் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளை ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். தற்போது தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நாளை மறுநாள் (டிச.15) அன்று முடிவடைய உள்ளது. அதை தொடர்ந்து மேலும் கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பது அல்லது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு விதிமுறைகளை அறிவிப்பது, மற்றும் ஓமைக்காரன் வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்வது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனைக்கு பின்னர் அறிவிப்புகள் வெளியிடப்படும். மேலும் புத்தாண்டு கொண்டாடுவதற்கு தடை விதிக்க வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!