விஜய் டிவி சீரியல் நடிகை ஜனனிக்கு திருமணம்? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
சமீப காலமாக சின்னத்திரையில் அடுத்தடுத்து பல திருமண நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜனனி அசோக் குமாருக்கு திருமணம் நடந்துள்ளதாக வெளியான தகவல் அறிந்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திடீர் திருமணம்:
கடந்த மாதம் முதல் சின்னத்திரையில் பிரபல நடிகர், நடிகைகள் பலருக்கும் அடுத்தடுத்து திருமணம் நடந்து வருகிறது. இதனால் சின்னத்திரை நட்சத்திரங்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்கள் முழுவதும் நிரம்பி வழிந்தது. முதலில், நவம்பர் 11ம் தேதி ஜீ தமிழ் செம்பருத்தி ஷபானா மற்றும் விஜய் டிவி பாக்கியலட்சுமி ஆர்யன் இருவருக்கும் திருமணம் நடந்தது. அதன்பிறகு, நவம்பர் 15ம் தேதி ஜீ தமிழ் ரேஷ்மா மற்றும் மதன் இருவருக்கும் திருமணம் நடந்தது. அதன் பிறகு திருமணம் சீரியல் சித்து மற்றும் ஷ்ரேயா இருவருக்கும் திருமணம் நடந்தது. இவர்களின் நெருங்கிய தோழியாக உள்ளவர் ஜனனி அசோக் குமார்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.10,000 பொங்கல் கருணைத்தொகை? அரசுக்கு கோரிக்கை!
இவர் முதலில் விஜய் டிவியின் மாப்பிளை சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். அறிமுக ஆன தொடரிலேயே நல்ல வரவேற்ப்பை பெற்றார். அதன் பின்னர், ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்தார். இந்த தொடரில் ஜனனிக்கு அதிக புகழ் மற்றும் மக்கள் மத்தியில் பரிட்சயம் கிடைத்தது. இதனால் பல வாய்ப்புகள் ஜனனிக்கு கிடைத்தது. இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளார். பல ப்ரோமோஷன் வீடியோக்களையும் செய்து வருகிறார். கோயம்புத்தூரை சொந்த ஊராக கொண்ட ஜனனி ஒரு சிறந்த மேக்கப் கலைஞராகவும் உள்ளார். தற்போது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் மிகவும் கோவக்கார பெண்ணாக நடித்துள்ளார்.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை பரினா – அவரே வெளியிட்ட பதிவு!
இவரது நெருங்கிய தோழியான ஷபானாவிற்கு சமீபத்தில் திருமணம் நடந்துள்ள நிலையில், ஜனனி தனது இன்ஸ்டா பக்கத்தில் கல்யாண பெண்ணை போல் அலங்கரித்து கழுத்தில் புது தாலியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதனால் இவருக்கு திடீரென்று திருமணம் முடிந்து விட்டதாக ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ஜனனி தனக்கு கல்யாணம் ஆகவில்லை என்றும், இது படப்பிடிப்பிற்காக எடுத்து என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தான் சினிமாவை திருமணம் செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதனால் ரசிகர்கள் ஆறுதல் அடைந்தனர்.