‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் நடிகை பரினா – அவரே வெளியிட்ட பதிவு!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து குழந்தை பிரசவத்துக்காக சிறிது காலம் விலகிய நடிகை பரினா தற்போது சீரியலில் மீண்டுமாக களமிறங்க இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை பரினா
ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய கதைக்களத்துடன் வெளியாகி கொண்டிருக்கும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக பிரிந்திருக்கும் பாரதி, கண்ணம்மா இருவரும் கோர்ட் உத்தரவுப்படி மீண்டுமாக ஒன்றிணைந்துள்ளனர். அதனால் ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வரும் இருவருக்கும் இடையே ஒரு புரிதல் ஏற்பட துவங்கியுள்ளது. இந்த சீரியலில் பாரதி மற்றும் கண்ணம்மாவின் பிரிவுக்கு காரணமாக இருந்த வெண்பா தற்போது ஜெயிலில் இருப்பதால் வேறு எந்த இடையூறும் இல்லாமல் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலின் கதைக்களம் ஸ்வாரசியமாக ஒளிபரப்பாகிறது.
தமிழகத்தில் நாளை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அந்த வகையில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் வெண்பா என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பரினா தனது முதல் குழந்தையின் பிரசவத்துக்காக இந்த சீரியலை விட்டு சில காலம் மட்டும் விலகி இருக்கிறார். இதற்கிடையில் சமீபத்தில் ஒரு அழகான ஆண் குழந்தைக்கு தாயான நடிகை பரினா வழக்கம் போல சமூக வலைதளங்களில் தனது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதனால் இவர் எப்போது சீரியலுக்கு திரும்புவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வந்தனர்.
சரவணனை சமையல் போட்டியில் தோற்கடிக்க அர்ச்சனாவின் திட்டம் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!
இந்நிலையில் நடிகை பரினா வெண்பாவுக்குரிய தோற்றத்தில் இருக்கும் சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலுக்கு திரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் குழந்தை பிரசவித்து ஒரு மாதமே ஆன நிலையில் மீண்டுமாக நடிக்க வந்துள்ள நடிகை பரினாவுக்கு அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்போது இந்த சீரியலில் வெண்பாவின் என்ட்ரிக்கு பிறகு கதையில் வேகம் இருக்கும் எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.