தமிழகத்தில் நாளை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
தமிழகத்தில் நாளை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (டிச.14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை (டிச.14) ஒரு நாள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

மின்தடை அறிவிப்பு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் பல்வேறு இடங்களில் மின் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்கு மின் கசிவு மற்றும் மின் இணைப்பு கம்பியில் ஏற்படும் மின் கோளாறுகள் தான் முக்கிய காரணமாகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தற்போது பருவ மழைக்காலம் என்பதால் அநேக இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் சாலைகளில் ஏராளமான இடங்களில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. மேலும் சாலைகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.

ஜீ தமிழ் சர்வைவர் நிகழ்ச்சிக்கு பின் நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட முதல் பதிவு – ரசிகர்கள் வாழ்த்து!

இதனை முறையாக மாதந்தோறும் சரி செய்ய மின் பராமரிப்பு பணிகளை அரசு மேற்கொள்கிறது. இவ்வாறு மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின் தடையை மாதந்தோறும் மின்வாரியம் அறிவிக்கிறது. அத்துடன் நாளை தச்சநல்லூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளது. மேலும் இங்குள்ள மின் கம்பங்கள் மற்றும் மின் பாதையை மாற்றியமைக்கும் பணிகளும் நடைபெற உள்ளது. இதன் விளைவாக நாளை தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

சரவணனை சமையல் போட்டியில் தோற்கடிக்க அர்ச்சனாவின் திட்டம் – இன்றைய “ராஜா ராணி 2” எபிசோட்!

மேலும் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான சந்தி மறித்தம்மன் கோவில், மதுரை பைபாஸ், நல் மேய்ப்பர் நகர், கோகுல் நகர், கீழக்கரை, செல்வ விக்னேஷ் நகர், கிராண்டு புது தெரு, முருகாநகர், குறிச்சி 1, 2, 3 தெருக்கள் ஆகிய இடங்களில் நாளை (டிச.14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. அத்துடன் மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!