வருமான வரி பிடித்தம் செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருமான வரித்துறை பிடித்தம்:
மாதாந்திர வருமானம் பெறுபவர்கள் மற்றும் சம்பளம் பெரும் நபர்கள் வருமான வரித்துறையின் இணையதளத்தில் தங்களின் வரி மற்றும் கணக்கு தொடர்பான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாதாந்திர சம்பளம் பெரும் பலரும் வரிவிலக்கு பெறுவதற்காக பல்வேறு வகையான போலி ரசீதுகளையும் சமர்ப்பித்து அரசை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நடப்பு நிதியாண்டில் வருமான வரி கணக்கிட்டு முறை தொடர்பான புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. வருமான வரி பிடித்தம் செய்யும் முறை தொடர்பாக அரசு ஊழியர்கள் மார்ச் 18 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கருவூலகத்துறை உத்தரவிட்டிருந்தது.
ரூ.37,000/- சம்பளத்தில் கப்பல் தளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த விவரங்களுடன்!
ஆனால் இதில் சிக்கல்கள் உள்ளதாக கோரிக்கைகள் எழுந்ததை அடுத்து தற்போது ஏப்ரல் 2023 முதல் 2024 மார்ச் மாதம் வரையிலான காலத்தில்வருமான வரி பிடித்தம் தொடர்பான முடிவு செய்ய தேவையான ஆவணங்களையும், கணக்கு முறையை தேர்வு செய்வதையும் ஏப்ரல் 15, 2024க்குள் முடிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கருவூலகத் துறையின் இணையதளத்தில் வருமான வரி பிடித்தம் தொடர்பான விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.