ஆதார் இணைப்பிற்கு செப்டம்பர் 1 வரை கால அவகாசம் நீட்டிப்பு – வருங்கால வைப்பு நிதி!
மத்திய அரசின் அறிவிப்பின் படி, ஒருவரது வருங்கால வைப்பு நிதி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகளுக்கான கால அவகாசம் தற்போது செப்டம்பர் 1 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் இணைப்பு
மத்திய அரசு வழங்கியுள்ள தனித்துவ அடையாள அட்டையாகிய ஆதார் தற்போது அனைத்து சேவைகளுக்கும் அவசியமாகி விட்டது. அந்த வகையில் வங்கி கணக்கு துவங்கி புதிய சிம் கார்டு வாங்குவது வரை அனைத்துக்கும் ஆதார் அட்டைகள் கேட்கப்படுகிறது. இது தவிர வருமான வரி செலுத்தும் ஒவ்வொருவரது ஆதார் எண்ணும், அவரது பான் என்னுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது.
தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – போலீசார் தீவிர வாகன சோதனை!
அந்த வரிசையில் தற்போது வருங்கால வைப்பு நிதி கணக்குடன் (FD) ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142 ஆவது பிரிவில் இயற்றப்பட்ட புதிய விதிமுறைகளின் கீழ், ஒவ்வொரு ஊழியர்களின் PF கணக்குடன், ஆதார் எண்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த உத்தரவின் படி, வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் ஜூன் 1 ஆம் தேதிக்குள் அவர்களது வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
TN Job “FB Group” Join Now
இதை தொடர்ந்து கொரோனா 2 ஆம் அலை காரணமாக வங்கிகளுக்கு சென்று இத்தகைய சேவைகளை நிறைவேற்ற முடியாததால், இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பலரது தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்து வந்தது. அதனால் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் (FD) ஆதார் இணைப்பதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 1 வரை நீட்டிப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.