தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு – போலீசார் தீவிர வாகன சோதனை!
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள போதிலும் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனை:
தமிழகத்தில் கொரோனா தொற்று அச்சம் காரணமாக கடந்த மே 10 ம் தேதி அன்று முதலில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு படிப்படியாக நீடிக்கப்பட்டு தற்போது ஜூன் 21ம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இடையில் இரண்டு வாரங்களாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்த காரணத்தால் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது. இதனால் ஜூன் 14 ம் தேதி முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.4000 நிவாரணம்? அரசிற்கு கோரிக்கை!
அவசர தேவைகளுக்காக பொதுமக்கள் இ – பதிவு செய்து வெளியில் செல்லும் முறை நடைமுறையில் இருந்து வந்தது. பின்னர் ஜூன் 14ம் தேதி முதல் சில குறிப்பிட்ட தொழில் செய்யும் தொழிலாளர்கள் இ – பதிவு செய்து பணிக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்களை கண்காணிக்க காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாகன சோதனையின் போது முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். மாலை 5 மணிக்கு பின்னர் வாகன சோதனையில் அதிக கெடுபிடிகளை காவல்துறையில் மேற்கொள்கின்றனர். மாநில எல்லைகளிலும், நகர்புறங்களிலும் உயரதிகாரிகளின் உத்தரவில் பேரில் வாகன சோதனை செய்வதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
TN Job “FB Group” Join Now
கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த 68 நாட்களில், முகக் கவசம் அணியாதவர்கள் மீது 14 லட்சத்து 57 ஆயிரத்து 895 வழக்குகளும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீது 77 ஆயிரத்து 208 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.