தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.4000 நிவாரணம்? அரசிற்கு கோரிக்கை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.4000 நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று அரசிற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரணம்:
தமிழகத்தில் கொரோனா நோய்பரவல் காலத்தில் பாதிக்கப்பட்டு வரும் மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.4000 நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரணமாக ரூ.4000 வழங்க வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
IFS பதவிகளுக்கான மெயின் தேர்வு முடிவுகள் – UPSC இணையதளத்தில் வெளியீடு!
இது குறித்து அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா ஊரடங்கால் ஆட்டோ, கட்டுமானம், தையல், மீன்பிடி, சாலையோர வியாபாரம் உள்ளிட்ட அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். இதனால் ஆட்டோ ஓட்டுனர்கள் பயனடையும் வகையில் ஆட்டோவில் பயணிக்க இ-பதிவு முறையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழக கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு ரூ.4000 நிவாரணமாக வழங்கப்படுவதை போல் நாட்டுப்புற கலைஞர்கள், ஆட்டோ தொழிலாளர்கள், சலவை தொழிலாளர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் வாகனம் எப்.சி எடுக்கும் காலம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கும் காலம் போன்ற அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலக பணிகளுக்கும் வருகிற டிசம்பர் மாதம் வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டும் என்றும் மேலும் இஎம்ஐ செலுத்த கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் சிபிஎம் மாநில செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.