உத்தரகண்டில் ஜூலை 6 முதல் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – 50% திறனுடன் மால்கள் திறப்பு!
உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு உத்தரவை ஜூலை 13 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பொது முடக்கத்தில் 50% இயக்கத்துடன் மால்கள் திறக்கப்பட உள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு
கொரோனா 2 ம் அலை தடுப்பு நடவடிக்கையாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு உத்தரவை ஜூலை 13 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பதாக உத்தரகண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பொது முடக்கத்தின் போது 50% திறன் கொண்ட வணிக வளாகங்களை திறக்க அரசு அனுமதித்துள்ளது. தவிர மற்றொரு தளர்வுகளாக வழக்கம் போல வார இறுதி நாளில் பணி நிறுத்தத்திற்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு முன்னதாக, நைனிடால் மற்றும் முசோரி உள்ளிட்ட நகரங்களில் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து கடைகளும் இயங்குவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டது.
Reliance Jio அதிரடி நன்மைகளை அளிக்கும் புதிய பிளான் – முழு விவரம் இதோ!
பொதுவாக உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு விடுமுறைகள் விடப்படுவது உண்டு. அந்த வகையில் டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடைகள் அனைத்தும் மூடப்படும். அதே நேரத்தில் புதன்கிழமை தோய்வாலா நகரத்திலும், வியாழக்கிழமைகளில் ரிஷிகேஷ், வெள்ளிக்கிழமை ஸ்ரீநகர் உட்பட பல நகரங்களில் வாரத்திற்கு ஒரு நாள் கடைகள் மூடப்பட்டிருக்கும். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் இந்த விடுமுறைகள் தொடரும் என அமைச்சர் சுபோத் யூனியல் தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
இருப்பினும், நீச்சல் குளங்கள், மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் திரையரங்குகள் மீதான கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்ற வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் உத்தரகண்ட் மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்து வரும் வேளையில், கொரோனா 3 ஆம் அலையை தடுக்கும் விதத்தில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகிறது.