தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு, தடுப்பூசி தட்டுப்பாடு – 3வது அலை அபாயம்!
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் அனைவரும் விதிமுறைகளை பின்பற்றாமல் பொது வெளியில் சுற்றி திரிய தொடங்கிவிட்டனர். இதனால் தமிழகத்தில் மூன்றாவது அலை உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் உள்ள மாவட்டங்கள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி வகை 2 மற்றும் 3 ல் அதிக அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் வகை 1 ல் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் குறைந்த அளவிலான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி வகை 1 ல் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்களில் இன்று (ஜூன் 28) காலை 6 மணி முதல் புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு இ -பதிவு அவசியம் – அரசு அறிவிப்பு !!
இதன் காரணமாக 11 மாவட்டங்களில் மக்கள் கடைகளுக்கு செல்வதாக கூறி பொது இடங்களில் விதிகளை கடைபிடிக்காமல் சுற்றி திரிகின்றனர். மாநில அரசு பல்வேறு அறிவுரைகள் வழங்கினாலும் அதை மக்கள் பெரிதும் எடுத்துக் கொள்வது போல் தெரியவில்லை. ஒரு புறம் இப்படி என்றால் மறுபுறம் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது சென்னை மற்றும் திருச்சியில் தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் டெல்டா மாவட்டங்களில் தற்போது தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டு வருகிறது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு சார்பில் தமிழகத்திற்கு போதுமான அளவு தடுப்பூசி வழங்காதது என்பதே இதற்கு காரணம் என்று குற்றங்கள் எழுந்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் தமிழகத்தில் தற்போது டெல்டா பிளஸ் வகை கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் கணக்கு தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று மூன்றாவது அலையாக உருவெடுக்கும் என்று ஏற்கனவே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த கால கட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு, மக்கள் அலட்சியம் காரணமாக தமிழகத்தில் மூன்றாம் அலை விரைவில் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.