அரசு வேலைக்கு காத்திருப்போர் கவனத்திற்கு – இனி ஆன்லைன் தேர்வு மட்டுமே! பாடத்திட்டம் உருவாக்க நிபுணர் குழு!
மத்திய அரசுத் துறையில் உள்ள பணிகளுக்கு ஆன்லைன் தேர்வு மூலம் ஆட்சேர்ப்பு நடத்தி புதிய ஊழியர்களை தேர்வு செய்வதற்கான பாடத்திட்டத்தை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் தேர்வு
பொதுவாக மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளில் உள்ள காலியிடங்களுக்கு பல்வேறு போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்சேர்ப்பு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் தமிழகத்திலும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலமாக அரசுப்பணிகளில் ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதே போல மத்திய அரசுத் துறையில் வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு பொது தகுதித் தேர்வு நடத்தப்பட்டு ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகிறார்கள்.
TN Job “FB Group” Join Now
இப்போது அரசுப் பணிக்கு பொது தகுதித் தேர்வு நடத்தி வேலைவாய்ப்புகளை வழங்குவதற்காக ஆன்லைன் தேர்வு பாடத் திட்டங்களை அமைக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற அவையில், அரசு வேலைக்கு ஆட்சேர்ப்பு செய்வது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பாஜகவை சேர்ந்த மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருக்கிறார். அதில், ‘மத்திய அரசு பணிகளுக்கு தகுதி உள்ளவர்களை தேர்வு செய்ய அரசுப் பணியாளர் வாரியம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கிப் பணியாளர் அமைப்பு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் நாளை(மார்ச் 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த வாரியங்கள் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு புதிய ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது அரசு வேலை வாய்ப்புகளுக்கு ஆன்லைன் மூலமாக பொதுத் தகுதித் தேர்வு நடத்தப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆன்லைன் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்களை உருவாக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டும் அரசு பணியாளர் தேர்வு வாரியங்கள் நடத்தும் தேர்வில் பங்கேற்க முடியும்’ என குறிப்பிட்டுள்ளார்.