தமிழகத்தில் நாளை(மார்ச் 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (மார்ச் 26) காலை 9 மணி முதல் மதியம் 2 வரை பராமரிப்பு பணிகள் நடக்க இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் அறிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம்தோறும் மின்தடை ஏற்படுவது வழக்கம். இந்நிலையில் தற்போது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, மேலப்பாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (மார்ச் 26) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதனால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் பகுதிகள், வி.எம்.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலகுளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத்நகர், நீதிமன்ற பகுதி, சாந்திநகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைக்கொழுந்துபுரம், மணப்படைவீடு, கீழநத்தம், பாளையங்கோட்டை பஸ் நிலையம், மகாராஜநகர், தியாகராஜநகர், ராஜகோபாலபுரம், சிவந்திபட்டி, அன்பு நகர், முருகன் குறிச்சி, மேலப்பாளையம் கொட்டிகுளம் பஜார், அம்பை மெயின் ரோடு, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம் மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹாமீம்புரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தான் ஒரு அனாதை என்பதை அறிந்துகொண்ட ஹேமா – விறுவிறுப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா!
இது தவிர, மேலகருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான் குளம், ஈஸ்வர்யாபுரம், ஆஸ்பத்திரி ரோடு, குலவணிகர்புரம், தெற்கு பைபாஸ் ரோடு, மேலகுலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுப்புலவர் தெரு, ஆசாத் ரோடு, பி.எஸ்.என். கல்லூரி, பெருமாள்புரம், பொதிகை நகர், அன்பு நகர், திருமால் நகர், திருநகர், மகிழ்ச்சி நகர், அரசு ஊழியர் குடியிருப்பு (என்.ஜி.ஓ. காலனி), பொறியியல் கல்லூரி பகுதி, புதிய பஸ் நிலையம், ரெட்டியார்பட்டி, டக்கரம்மாள்புரம், கொங்கந்தான் பாறை, பொன்னாக்குடி, அடை மிதிப்பான் குளம், செங்குளம், புதுக்குளம், இட்டேரி, தாமரைச்செல்வி ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக நெல்லை நகர்ப்புற மின்வினியோக செயற்பொறியாளர் முத்துக்குட்டி அறிவித்துள்ளார்.