TNPSC குரூப் 2A பிரிவின் செயல் அலுவலர் பணிக்கான காலியிடங்கள் அறிவிப்பு – விண்ணப்பிக்க முக்கிய விவரங்கள்!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 2A பிரிவுக்கான செயல் அலுவலர் பணிக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களும் இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
செயல் அலுவலர் பணி:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணிகளுக்கான பணியாளர்களை தேர்வுகளை நடத்துவதன் மூலம் தேர்வு செய்கிறது. இதற்காக பதவிகளுக்கு தகுந்த படி தனி தனியாக TNPSC தேர்வுகளை நடத்துகிறது. கடந்த 2020 முதல் தமிழகத்தில் நிலவி வந்த கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் ஏதும் நடத்தப்படவில்லை. இதனால் பல பணிகளுக்கான பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளது. இந்நிலையில், நோய் தொற்று பாதிப்பு குறைந்து தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் தேர்வுகளை நடத்துவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, TNPSC தலைவர் பாலச்சந்திரன் அவர்கள், குரூப் 2 தேர்வு பிப்ரவரி மாதமும், குரூப் 4 தேர்வு மார்ச் மாதம் நடத்தப்படும் என்றும் முன்னதாக அறிவித்திருந்தார். தற்போது குரூப் 2 ஏ பிரிவில் உள்ள இந்து சமய அறநிலையத்துறையில் 4 செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. அறிவிப்பின் படி, http://www.tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பிப்ரவரி 21 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும், ஏப்ரல் 23 மற்றும் 24 தேதிகளில் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்படுள்ளது. இந்த பணிக்கு இந்துகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
Post Office சேமிப்பு கணக்கு தொடங்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள்!
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனுடன், கூட்டுறவுத் துறை தணிக்கைப் பிரிவில் 8 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கும் பிப்ரவரி 21 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், இந்த பணிக்கு தேர்வு ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் அரசின் கட்டாய தமிழ்மொழி தாள் அறிவிப்பின் படி இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.