தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – மே முதல் வாரம் தேர்வுகள் துவக்கம்!
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு ஆண்டுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. அதன்படி தற்போது ஆண்டு தேர்வுக்கான கால அட்டவணை வெளியாகியுள்ளது.
பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்த பிறகு கடந்த 2021 செப்டம்பர் மாதம் 1ம் தேதி முதல் வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டு. அரையாண்டு விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் வேகமெடுக்க தொடங்கியது. அதனால் மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31ம் தேதி வரை மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அதன் பிறகு 5 வயதிற்குட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. கோவாக்சின் தடுப்பூசி 2 டோஸ் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக மாணவர்களும் பாதுகாப்பான நிலையில் இருந்ததை அடுத்து பிப்ரவரி 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. அதன்படி கடந்த மார்ச் மாதம் பொதுத் தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.
அதில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என்று வரும் 25ம் தேதி செய்முறை தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல 1 முதல் 5ஆம் வகுப்பு வரை மே 13 ஆம் தேதியோடு வகுப்புகள் முடிவடைகிறது. 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் முதல் வாரத்தில் ஆண்டுத்தேர்வு தொடங்கும் என்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 30 நாட்களும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 23 நாட்களும் 12 ஆம் வகுப்புக்கு 12 நாட்களும் கோடை விடுமுறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.