தமிழகத்தில் நாளை பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
அரியலூர் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 18ம் தேதி அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள திருத்தலங்களில் ஆண்டுதோறும் சிறப்பாக திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு மக்கள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் அன்றைய தினம் உள்ளூர் விடுறையை அறிவித்து வருகிறது. இப்பண்டிகைகளில் காலங்களில் அம்மாவட்ட மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மற்றும் மற்ற மாநில மக்களும் வருகை புரிவர். அந்த வகையில் தற்போது சித்திரை மாதத்தை முன்னிட்டு பெரும்பாலான மாவட்டங்களில் திருவிழா நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வித்துறை முடிவு!
அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதே போல தேனி மாவட்டம் கண்ணகி கோயிலில் சித்திரை பௌர்ணமி விழாவை முன்னிட்டு ஏப்ரல் 16ம் தேதியான நேற்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து நேற்று மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையை அறிவித்தது.
இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கல்லங்குறிச்சி கலியுக வரதராஜ பெருமாள் கோவில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழாவை முன்னிட்டு நாளை (ஏப்ரல் 18) ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.