SSC 20,000 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு, மாநில மொழிகளில் வினாத்தாள் – எம்.பி கோரிக்கை!
Staff Selection Commission எனப்படும் பணியாளர் தேர்வு ஆணையம் மூலம் 20,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த காலிப்பணியிடங்களுக்கான தேர்வானது இந்தியா முழுவதும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.
மாநில மொழிகளில் வினாத்தாள்:
மத்திய அரசின் இந்த 20,000 காலிப்பணியிடங்கள் Combined Graduate Level தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ளன. இந்த தேர்வின் மூலம் உதவி கணக்கு அலுவலர், உதவி தணிக்கை அலுவலர், அசிஸ்டெண்ட் செக்ஷன் ஆபீசர், வருமான வரி ஆய்வாளர், உதவி ஆய்வாளர், இளநிலை புள்ளியியல் அலுவலர் போன்ற பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இந்த காலிப்பணியிடங்களுக்கு தேர்வர்கள் Computer Based Examination (Tier-I), Tier-II, Tier-III (Descriptive Paper), Tier-IV (Skill Test) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த “Staff selection commission” தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடைபெற உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
Exams Daily Mobile App Download
இந்த அறிவிப்பு சமவாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது என்றும், இந்தி மொழி தெரியாத தேர்வர்களுக்கு பாரபட்சம் காண்பிப்பது போல உள்ளதாகவும் தேர்வர்கள் பலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இந்த பணி நியமனம் பெற உள்ள ஊழியர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்பட உள்ளனர். உள்ளூர் மொழி அறிவு இல்லாமல் எப்படி இவர்கள் மக்களுக்கு சேவை ஆற்றப் போகிறார்கள்? என பல்வேறு தரப்பில் இருந்து கேள்வி எழுப்பபட்டுள்ளது. இந்த நிலையில் மாநில மொழிகளில் வினாத்தாள் வேண்டும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அவர்கள் மத்திய பணியாளர், பொது மக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் இணை மந்திரி டாக்டர் ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்