ஜனனி எதுக்கு வெளியே போகணும்.. அவ இங்க தான் இருப்பா.. குணசேகரனை வாயடைக்க வைத்த பாட்டி!
எதிர்நீச்சல் சீரியலில் சக்தி மற்றும் குந்தவைக்கு நடக்க இருந்த திருமணம் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்டு உள்ள நிலையில், ஜனனி மீண்டும் வீட்டிற்கு வருவது போன்ற காட்சிகள் இனி சீரியலில் வர உள்ளது.
எதிர்நீச்சல்:
எதிர்நீச்சல் சீரியல் தான் தற்போது ஹாட் டாபிக் ஆக சின்னத்திரை முழுவதும் பேசப்பட்டு வருகிறது. பல்வேறு முக்கிய கதாபாத்திரங்களின் படைப்பு மற்றும் அவர்களின் நேர்த்தியான நடிப்பின் மூலம் எதிர்நீச்சல் பலருக்கும் பேவரைட் சீரியலாக மாறி உள்ளது. படித்த பெண்களை திருமணம் செய்திருந்தாலும், அவர்கள் சமையலறையில் மட்டுமே பேச வேண்டும் என்ற ஆணாதிக்க குணம் படைத்த குடும்பத்தில் நாயகி ஜனனி மருமகளாக படாதபாடு படுகிறார்.
Exams Daily Mobile App Download
ஜனனி அடிமைத்தனத்தில் இருந்து வெளியே வந்து அந்த குடும்பத்தில் அடிமைகளாக இருக்கும் பிற மருமகள்களையும் காப்பாற்ற நினைக்கிறார். ஆனால் ஒருகட்டத்தில் குணசேகரனின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறுகிறார் ஜனனி. இது தான் சாக்கு என்று தனது நண்பரின் மகளை சக்திக்கு கல்யாணம் செய்து வைக்க பார்க்கிறார் குணசேகரன். ஆனால் கடைசி நேரத்தில் அந்த திருமணத்தை ஜனனி நிறுத்தி விடுகிறார்.
தந்தையான பிரபல விஜய் டிவி சீரியல் நடிகர் – அவரே வெளியிட்ட புகைப்படம்! குவியும் வாழ்த்துக்கள்!
Follow our Instagram for more Latest Updates
இதனால் குணசேகரன் ஜனனி மீது கடும் கோவத்தில் இருக்கிறார். இந்நிலையில், புதிய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் குணசேகரனின் அப்பத்தா, ஜனனி இனி இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட வேறு யாரும் எதிர்த்து பேச முடியாமல் இருக்கின்றனர். இதனால் குண சேகரனுக்கு ஜனனி மீது மேலும் கோவம் அதிகரிக்கிறது. சக்தி உள்பட பாட்டியின் சொல்லுக்கு மறுவார்த்தை பேச முடியாமல் நிற்கின்றனர். ஆக மொத்தம் அடுத்து வரும் எதிர்நீச்சல் எபிசோடுகள் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் என்று மட்டும் தெரிகிறது.