காதலியை படாதபாடு பட்டு கரம் பிடித்த எதிர்நீச்சல் சீரியல் நடிகர் – வைரலாகும் அழகிய புகைப்படங்கள்!
நல்ல TRP ரேட்டிங்கில் தற்போது ஒளிபரப்பாகும் தொடர் தான் எதிர்நீச்சல். தற்போது இதில் சக்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகரை பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
எதிர்நீச்சல்:
கோலங்கள் புகழ் திருச்செல்வம் இயக்கத்தில் டெலிகாஸ்ட் செய்யப்படும் தொடர் தான் எதிர்நீச்சல். ஆணாதிக்கம் படைத்த குணசேகரனின் ஆட்டத்தை அடக்க வீட்டில் உள்ள பெண்கள் அனைவரும் தற்போது ஒன்றாக இணைந்துள்ளனர். ரசிகர்கள் பலரும் இந்த தொடரின் ஒளிபரப்பு நேரத்தை சற்று முன்பாக மாற்றும்படி சீரியல் குழுவுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
இந்த தொடரில் நாயகன் சக்தியாக நடிப்பவர் சபரி. சுயபுத்தி இல்லாமல் அண்ணன் பேச்சை மட்டும் கேக்கும் இவரை பார்த்து நமக்கே கோவம் தான் வரும். ஆனால் நிஜத்தில் இவர் அவ்வாறு இல்லையாம். சிறுவயதில் இருந்து சினிமா மீது ஆர்வம் கொண்டவராம் சபரி. ஒரு சில ஆல்பம் பாடல்களில் இவர் நடித்து கொண்டிருக்கும் பொழுது தான் இவருக்கு கலர்ஸ் தமிழ் டிவியில் தறி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
சந்தோசமாக நடந்து முடிந்த பூமி பூஜை.. மகிழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – இன்றைய எபிசோட்!
Exams Daily Mobile App Download
தற்போது எதிர்நீச்சல் சீரியலில் கலக்கி வருகிறார். சீரியலை போல அல்லாமல் சபரி நிஜ வாழ்க்கையில் கிருத்திகா என்ற பெண்ணை பல வருடங்களாக காதலித்து பிடிவாதமாக பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து இருக்கிறார். பலருக்கு இவரின் திருமணம் பற்றி தெரியாமல் இருந்தது. தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது