ராதிகாவை கண்டபடி திட்டி கோபியை விட்டு விலக சொல்லும் எழில் – ப்ரோமோ ரிலீஸ்!
ராதிகாவை ஏற்றுக்கொண்டு வாழுங்கள் என கூறிவிட்டு பாக்கியா வீட்டை விட்டு சென்றதும் எழில் ராதிகாவின் வீட்டிற்கு வந்து ராதிகாவை கண்டபடி திட்டு கோபியை விட்டு விலக சொல்லி கெஞ்சும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாக்கியலட்சுமி :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி தொடர் கடந்த சில வாரங்களாகவே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. முதலில் ராதிகாவிற்கு உண்மைகள் தெரிய வந்தது. பின்பு ராதிகா கோபியை ஏற்றுக்கொள்வாரா? என யோசிக்கும் நேரத்திலேயே பாக்கியாவிற்கும் அனைத்து உண்மைகளும் தெரிந்துவிட்டது. எப்படியும் பாக்கியா இதனை மனதிற்குள்ளேயே போட்டு அமைதியாக இருப்பார் என எதிர்பார்த்த நேரத்தில் கோபியிடம் நேருக்கு நேர் கேட்டு மொத்த குடும்பத்தின் முன்னிலையிலும் உண்மையை போட்டுடைத்துவிட்டார்.
Exams Daily Mobile App Download
ஆனால், கடைசி வரைக்குமே கோபி மீது ஈஸ்வரி நம்பிக்கை வைத்திருந்தார். ஈஸ்வரி மட்டுமல்லாமல் பாக்கியா, இனியா என அனைவருமே கோபி மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தனர். மேலும், கோபி குடும்பத்தினருக்காக நேரத்தை ஒதுக்குவாரா எனவும், பாசமாக ஒரு வாரத்தை பேசமாட்டாரா எனவும் ஏங்கி கொண்டிருந்தனர். ஆனால், கோபிக்கு பின்னர் இத்தனை சூழ்ச்சிகள் இருக்கும் என்பது யாருக்குமே தெரியாமல் போய்விட்டது. தற்போது இனியாவும் கோபியை வெறுக்க ஆரம்பித்துவிட்டார். மொத்த குடும்பமும் கோபியை வெறுக்கும் நிலையில் கோபி அடுத்து என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க மறுபுறம் கோபி தான் பாக்கியாவின் கணவர் என்பது தெரியவந்ததும் முழுவதுமாக கோபியை விட்டு விலக வேண்டும் என நினைக்கிறார். ஆனால், ராதிகாவின் அம்மா மற்றும் அண்ணன் இருவரும் கோபியை ஏற்றுக்கொள்ள சொல்லி வற்புறுத்தி கொண்டிருக்கின்றனர். இந்த சமயத்தில் எழில் ராதிகாவின் வீட்டிற்கு வந்து உங்களால் தான் எங்கள் குடும்பம் பிரிந்துவிட்டது என கண்டபடி ராதிகாவை திட்டும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.