ஜீவாவை கேவலப்படுத்தும் தனம், அதிர்ச்சியில் குடும்பத்தினர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பான கதைகளதுடன் சென்று கொண்டிருக்கிறது. இதனால் அடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நல்ல இடத்தை பிடித்து வருகிறது. கடந்த சில எபிசோடுகளில் முல்லை ட்ரீட்மென்ட்காக வாங்கிய கடனை ஜீவா, மீனாவிடம் பணம் வாங்கி கடன்காரனிடம் கொடுத்ததால் மீனாவின் அப்பா மூர்த்தியிடம் சண்டை போட்டிருந்தார். இதனால் கதிர் முல்லை வீட்டை விட்டு வெளியேறி வாடகை வீட்டிற்கு சென்றனர். கதிர் வீட்டை சென்றதால் மன வருத்தத்தில் இருந்த மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டார்.
Exams Daily Mobile App Download
இந்த நிலையில் கடையை யார் பார்த்து கொள்வது என்ற கேள்வி எழ, ஜீவா பார்த்துக் கொள்ளட்டும் அவன் ஒரே ஆளா அவங்க மாமனார் கடையை பார்த்துக் கொண்டான், அதனால நம்ம கடையை ஜீவாவே பார்த்துக்கட்டும் என்று மூர்த்தி சொல்கிறார். உடனே தனம் இல்ல அவன் ஒரே ஆள் எப்படி பாத்துப்பான், நானும் போய் கடையை பாத்துக்கிறேன் சொல்லி கடைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக்கொள்கிறாள். அத்துடன் குழந்தையையும் பார்த்து கொள்கிறாள். இந்நிலையில் ஜீவா கடைக்கு வரும் கஸ்டமர் ஒருவரிடம் கோபமாக நடந்து கொள்கிறார். இதனை பார்த்த தனம்,கஸ்டமரிடம் மன்னிச்சிடுங்க நான் தான் கடைக்கு இன்ச்சார்ஜ் ஜீவா வேலை பாக்குற பையன்கிற மாதிரி பதில் சொல்ராங்க. இதுனால ஜீவா மனமுடைந்து தலையை தொங்க போட்டு கொள்கிறார்.
பாக்கியாவை ஏமாற்றியதால் கோபியை வெறுக்கும் இனியா – அதிரடி ப்ரோமோ ரிலீஸ்!
இது ஒரு புறம் நடக்க இன்னொருபுறம் கண்ணன், ஐஸ்வர்யா இருவரும் வீட்டிற்கு தெரியாமல் வேலைக்கு செல்ல முடிவெடுக்கின்றனர். ஏற்கனவே கண்னனும் ஐஸ்வர்யாவும் வீட்டிற்கு தெரியாமல் கல்யாணம் பணிகிட்டதால நிறைய பிரச்சனை வந்தது. இப்போ இருவரும் எடுத்திருக்க முடிவல்ல என்ன பிரச்சனை வரும்னு தெரியல. இந்த பக்கம் கதிர், அண்ணனுக்கு தெரியாமல் வேலை பார்க்கிறார். இந்த விஷயம் மூர்த்திக்கு தெரிய வரப்போகும் நிலையில் அடுத்தடுத்து என்ன நிகழும் என்ற எதிர்பார்ப்பில் கதைக்களம் நகர்கிறது. மேலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.