ஊழியர்களுக்கு 8.1% வட்டி அளிக்கும் EPFOன் திட்டம் – முக்கிய விவரங்கள் இதோ!

0
ஊழியர்களுக்கு 8.1% வட்டி அளிக்கும் EPFOன் திட்டம் - முக்கிய விவரங்கள் இதோ!
ஊழியர்களுக்கு 8.1% வட்டி அளிக்கும் EPFOன் திட்டம் - முக்கிய விவரங்கள் இதோ!
 ஊழியர்களுக்கு 8.1% வட்டி அளிக்கும் EPFOன் திட்டம் – முக்கிய விவரங்கள் இதோ!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் மூலம் ஊழியர்களுக்கு சேமிப்பு பணம் செலுத்தப்படுவதோடு, வட்டியையும் அளித்து வருகிறது. இந்த தொகை ஊழியர்களின் இக்கட்டான நேரங்களில் பயன்படுத்தப்படுவதற்கு உதவியாக இருக்கிறது.

PF தொகை:

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் ஆனது மாதந்தோறும் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12% தொகையை சேமிப்பு கணக்கில் செலுத்துகிறது. இதே அளவிலான தொகையை ஊழியரின் நிறுவனமும் அவரது சேமிப்பில் கணக்கில் செலுத்த வேண்டும். இந்த PF தொகைக்கு அரசு ஆண்டுதோறும் வட்டி விகிதத்தினை நிர்ணயிக்கிறது. அந்த குறித்த அளவிலான வட்டியும் PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. மேலும், ஊழியர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, அந்த PF தொகையில் இருந்து கடன் உதவிகளையும் பெற்றுக் கொள்ளலாம்.

பொங்கல் பரிசை பெற ஆதார் கட்டாயம்? – தமிழக அரசின் விளக்கம்!

இந்நிலையில், 2021-2022ம் ஆண்டுக்கு EPFO ஆணையம் 8.1% வட்டியினை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், ஊழியர்கள் தங்கள் கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்துக் கொள்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு வழிகள் உள்ள நிலையில், EPFO போர்டல் மூலமாக எவ்வாறு PF கணக்கில் இருப்பை அறிந்து கொள்வது என்பதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

வழிமுறைகள்:

முதலில், பயனர்கள் EPFO ன் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

அதில், உங்கள் UAN எண் மற்றும் சில விவரங்களை உள்ளிட்டு லாக்இன் செய்ய வேண்டும்.

அதில், ‘மெம்பர் பாஸ்புக்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

இப்பொழுது, உங்கள் கணக்கில் உள்ள PF தொகை மற்றும் அதற்கான வட்டி விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்படும்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!