தமிழகத்தில் அதிகளவு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் திருப்பூர் மாவட்டம் – ஒரு பார்வை!
தமிழகத்தில் தற்போது அளிக்கப்பட்டுள்ள ஊரடங்கு தளர்வில் ஆடை உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் தொழில் நிறுவனங்களில் 20 லட்சம் பேருக்கு பதிலாக 10 லட்சம் பேர் மட்டுமே வேலை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வேலைவாய்ப்பு:
கொரோனா பேரலை பலரது வாழ்வில் மீளா துயரத்தை ஏற்படுத்தி வருகிறது. அதாவது நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு பலர் மரணத்தை தழுவியுள்ள நிலையில், பல குடும்பங்களில் பொருளாதார நிலை சீர் குலைந்து வறுமையில் வாடும் சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர். அதாவது திடீரென பேரலையாக உருவான கொரோனா பெருந்தொற்றால் பலரும் வேலை இழப்பு, வருவாய் இழப்பு போன்றவற்றால் சிக்கி தவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இந்தியாவில் வேலை இழப்பு என்பது பெருகிக்கொண்டே இருக்கிறதாக ஆய்வுகளும் தெரிவிக்கிறது.
அகில இந்திய மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு – மத்திய அரசு முடிவு!
குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் சிறு, குறு மற்றும் அமைப்பு, சாரா கட்டுமான தொழிலாளிகளின் வாழ்வாதாரம் கொரோனவால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் வேலையின்மை விகிதம் 8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவே மே மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் 14.5% வேலையின்மை விகிதம் அதிகரித்ததாக இந்தியப் பொருளாதார கண்காணிப்பு அமைப்பான (CMIE) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தமிழகத்தை பொருத்தளவு இளைஞர்களுக்கு என அதிகளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கி தரும் திருப்பூர் ஆடை தொழில் நிறுவனங்களில் பணி செய்து வந்த ஊழியர்கள் கொரோனா தொற்றால் பணியில்லாமல் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனிடையே ஊரடங்கு தளர்வில் இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், பல வட மாநில தொழிலாளிகள் இல்லாதது நிறுவனங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருக்க புதிய வேலை வாய்ப்புகளை தர காத்திருக்கும் இவ்வகை நிறுவனங்களில் படித்த, படிக்காத அனுபவமுள்ள தொழிலாளர்களை கண்டறிவதில் ஆர்வம் செலுத்தி வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் தொழில் துறைகளுக்கு முன்னோடியாக திகழும் திருப்பூர் மாவட்டத்தில் இந்த வேலையின்மை விகிதம் எவ்வித பாதிப்புக்களையும் ஏற்படுத்தவில்லை. அதாவது வேலையை இழந்தவர்களும் புதிய வேலை வாய்ப்பை பெற்றுக்கொள்வதற்கு ஏற்ற தலமாக திருப்பூர் அமைந்துள்ளது. இந்த ஆடைத் தொழில் நிறுவனங்களில் சுமார் 20 லட்சம் தொழிலாளர்கள் பணிக்கு அவசியம் என்றாலும், இப்போது 10 லட்சம் பேர் பணி செய்து வருகின்றனர். இருப்பினும் கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு ஆதரவாக திருப்பூர் மாவட்டம் இன்றும் வேலைவாய்ப்புகளை வழங்குவதில் முதலிடத்தில் உள்ளது