அகில இந்திய மருத்துவ படிப்பில் இடஒதுக்கீடு – மத்திய அரசு முடிவு!
இந்தியாவில் மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடும் வழங்க முடிவு செய்யப்பட்டு நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர மத்திய அரசால் நீட் என்னும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக மாநிலங்கள் முழுதும் விதிக்கப்பட்ட ஊரடகால் காலதாமதமாக வரும் செம்டம்பர் மாதம் 11ம் தேதி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் நீட் தேர்வு வினாத்தாள்களையும் மாற்றம் செய்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் மாநில அரசுகள் கட்டுப்பாட்டில் இயங்கும் மருத்துவ கல்லூரிகளில் ஓபிசி பிரிவினருக்கு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தது.
வன்னியர் சிறப்பு இட ஒதுக்கீடு வழக்குகள் – இடைக்கால உத்தரவு வழங்க நீதிமன்றம் மறுப்பு!
இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு குறித்து பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் அறிவிக்கப்பட்ட இட ஒதுக்கீடுகள் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் மத்திய கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தலைமையில் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் இட ஒதுக்கீடை முறைப்படுத்துவது பற்றி முடிவெடுக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
அதன்படி ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய தங்கியவர்களுக்கு 10% இட ஒதுக்கீடும் வழங்க முடிவு செய்யப்பட்டு நடப்பு கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் ஓபிசி பிரிவில் 1500 மாணவர்களும் முதுகலை படிப்பில் 2500 ஓபிசி மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும். மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவில் 550 மாணவர்களும், முதுகலையில் 1000 மாணவர்களும் இந்த இட ஒதுக்கீடு மூலம் பயனடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.