தமிழகத்தில் அக்.1 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விருப்ப பதிவு – முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து மாணவர்களுக்கு இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் அக்டோபர் 1ம் தேதி முதல் விருப்ப பதிவு தொடங்கவுள்ளது.
பொறியியல் கவுன்சிலிங்:
கொரோனா வைரஸ் பரவியதால் ஆண்டு இறுதி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு ஆல் பாஸ் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான பாடங்களை தேர்வு செய்து கல்லூரிகளில் விண்ணப்பிக்க தொடங்கினர். இந்நிலையில் கடந்த 17ம் தேதி அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள 440 இன்ஜினியரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கவுன்சிலிங் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எப்போ எடுப்பீங்க? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஆன்லைன் கவுன்சிலிங் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் கல்லூரிகள் வழங்கப்பட்டு வருகிறது. மொத்தம் 1.52 லட்சம் இடங்களுக்கு 1.39 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன. அதில் முதற்கட்டமாக சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவு மாணவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மொத்தம் 6,000 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு, விளையாட்டு பிரிவு, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான பிரிவு முதலியன அடங்கும்.
இந்தியாவில் சரியும் கொரோனா – ஒரே நாளில் 18,795 பேருக்கு தொற்று! 179 பேர் பலி!
பொது பிரிவில் சேரும் மாணவர்களுக்கான கட்டணம் செலுத்தும் வசதி நேற்று தொடங்கிய நிலையில் தரவரிசை பட்டியலில் 14,788 வரை உள்ளவர்கள் மட்டும் 30ம் தேதி மாலை 5:00 மணி வரை கவுன்சிலிங் கட்டணம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து இந்த மாணவர்களுக்கு அக்.1ம் தேதி முதல் விருப்பமான கல்லுாரிகள் மற்றும் பாடப்பிரிவுகளுக்கான பதிவு தொடங்கி 2ம் தேதி முடிகிறது. 3ம் தேதி உத்தேச ஒதுக்கீடும், 5ம் தேதி இறுதி ஒதுக்கீடும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையதளத்தை அணுகலாம்.